PS-S1E3-பொன்னியின் செல்வன்/E3-விண்ணகரக் கோயில்(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Vinnagara Koyil / Puthu Vellam episode artwork

EPISODE · Jul 20, 2022 · 15 MIN

PS-S1E3-பொன்னியின் செல்வன்/E3-விண்ணகரக் கோயில்(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Vinnagara Koyil / Puthu Vellam

from இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் · host RJ SHAKTHI

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள்  விளைகின்றன.வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி  இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள்  போவதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான் அல்லவா? அவன் நின்ற  இடத்துக்குச் சற்றுத் தூரத்திலேயே அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது. பழுவேட்டரையரின் ஆட்களிலே கடைசியாகச் சென்ற சிலரின் பார்வை அக்குதிரை மீது சென்றது. "அடே! இந்தக் குருதையைப் பாரடா!" என்றான் ஒருவன். "குருதை என்று சொல்லாதேடா! குதிரை என் சொல்!" என்றான் இன்னொருவன். "உங்கள் இலக்கோண ஆராய்ச்சி இருக்கட்டும்; முதலில் அது குருதையா  அல்லது கழுதையா என்று தெரிந்து கொள்ளுங்கள்!" என்றான் இன்னொருவன்  வேடிக்கைப் பிரியன். "அதையும் பார்த்து விடலாமடா!" என்று சொல்லிக் கொண்டு, அந்த ஆட்களில்  ஒருவன் குதிரையை அணுகி வந்தான். அதன் மேல் தாவி ஏற முயன்றான். ஏறப்  பார்க்கிறவன் தன் எஜமானன் அல்ல என்பதை அந்த அறிவுக் கூர்மையுள்ள குதிரை  தெரிந்து கொண்டது. அந்த வேற்று மனிதனை ஏற்றிக் கொள்ள மாட்டேன் என்று  முரண்டு பிடித்தது! "இது பொல்லாத குதிரையடா! இதன் பேரில் நான் ஏறக் கூடாதாம்!  பரம்பரையான அரசகுலத்தவன்தான் இதன் மேல் ஏறலாமாம். அப்படியென்றால் தஞ்சாவூர்  முத்தரையன் திரும்பி வந்துதான் இதன் மேல் ஏறவேண்டும்!" என்று அவன்  சமத்காரமாய்ப் பேசியதைக் கேட்டு மற்ற வீரர்கள் நகைத்தார்கள். ஏனென்றால், தஞ்சாவூர் முத்தரையர் குலம் நசித்துப் போய் நூறு  ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது சோழர்களின் புலிக்கொடி தஞ்சாவூரில் பறந்து  கொண்டிருந்தது. "குதிரையின் எண்ணம் அவ்விதம் இருக்கலாம். ஆனால், என்னைக் கேட்டால்,  செத்துப் போன தஞ்சாவூர் முத்தரையனைக் காட்டிலும் உயிரோடு இருக்கிற  தாண்டவராயனே மேல் என்பேன்!" என்றான் மற்றொரு வீரன். "தாண்டவராயா! உன்னை ஏற்றிக் கொள்ள மறுக்கும் குதிரை நிஜக்  குதிரைதானா என்று பார்த்துவிடு! ஒருவேளை, பெருமாளின் திருநாளுக்கு வந்த  பொய்க்கால் குதிரையாயிருந்தாலும் இருக்கலாம்!" என்றான் மற்றொரு பரிகாசப்  பிரியன். "அதையும் சோதித்துப் பார்த்து விடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டு  குதிரை மீது ஏறப்போன தாண்டவராயன் அதனுடைய வாலை முறுக்கினான். ரோஷமுள்ள  அக்குதிரை உடனே பின்னங்கால்களை நாலு தடவை விசிறி உதைத்துவிட்டு ஓட்டம்  பிடித்தது. "குருதை ஓடுகிறதடா! நிஜக் குருதை தானடா!" என்று அவ்வீரர்கள்  கூச்சலிட்டு, "உய்! உய்!" என்று கோஷித்து, ஓடுகிற குதிரையை மேலும்  விரட்டினார்கள்!. குதிரை, திருநாள் கூட்டத்துக்கிடையே புகுந்து ஓடிற்று. ஜனங்கள் அதன்  காலடியில் மிதிபடாமலிருப்பதற்காகப் பரபரப்புடன் அங்கும் இங்கும் நகர்ந்து  கொண்டார்கள். அப்படியும் அவர்களில் சிலர் உதைபட்டு விழுந்தார்கள். குதிரை  நெறிகெட்டு வெறி கொண்டு ஓடியது. இவ்வளவும் வந்தியத்தேவன் கண்ணெதிரே அதி சீக்கிரத்தில் நடந்து  விட்டது. அவனுடைய முகத் தோற்றத்திலிருந்து குதிரை அவனுடைய குதிரை என்பதை  ஆழ்வார்க்கடியான் கண்டு கொண்டான். "பார்த்தாயா, தம்பி! அந்தப் பழுவூர்த் தடியர்கள் செய்த வேலையை!  என்னிடம் நீ காட்ட வந்த வீரத்தை அவர்களிடம் காட்டுவதுதானே!" என்று குத்திக்  காட்டினான். வந்தியத்தேவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. எனினும்  பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையைக் கடைப்பிடித்தான். பழுவூர் வீரர்கள்  பெருங்கூட்டமாயிருந்தனர். அவ்வளவு பேருடன் ஒரே சமயத்தில் சண்டைக்குப்  போவதில் பொருள் இல்லை. அவர்கள் இவனுடன் சண்டை போடுவதற்காகக்  காத்திருக்கவும் இல்லை. குதிரை ஓடியதைப் பார்த்துச் சிரித்து விட்டு,  அவர்களும் விரைந்து மேலே நடந்தார்கள். குதிரை போன திசையை நோக்கி  வந்தியத்தேவன் சென்றான். அது கொஞ்ச தூரம் ஓடிவிட்டுத் தானாகவே நின்று  விடும் என்று அவனுக்குத் தெரியும். ஆகையால் அதைப் பற்றி அவன்  கவலைப்படவில்லை. பழுவேட்டரையரின் அகம்பாவம் பிடித்த ஆட்களுக்கு புத்தி  கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்தது.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள்  விளைகின்றன.வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி  இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள்  போவதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான் அல்லவா? அவன் நின்ற  இடத்துக்குச் சற்றுத் தூரத்திலேயே அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது. பழுவேட்டரையரின் ஆட்களிலே கடைசியாகச் சென்ற சிலரின் பார்வை அக்குதிரை மீது சென்றது. "அடே! இந்தக் குருதையைப் பாரடா!" என்றான் ஒருவன். "குருதை என்று சொல்லாதேடா! குதிரை என் சொல்!" என்றான் இன்னொருவன். "உங்கள் இலக்கோண ஆராய்ச்சி இருக்கட்டும்; முதலில் அது குருதையா  அல்லது கழுதையா என்று தெரிந்து கொள்ளுங்கள்!" என்றான் இன்னொருவன்  வேடிக்கைப் பிரியன். "அதையும் பார்த்து விடலாமடா!" என்று சொல்லிக் கொண்டு, அந்த ஆட்களில்  ஒருவன் குதிரையை அணுகி வந்தான். அதன் மேல் தாவி ஏற முயன்றான். ஏறப்  பார்க்கிறவன் தன் எஜமானன் அல்ல என்பதை அந்த அறிவுக் கூர்மையுள்ள குதிரை  தெரிந்து கொண்டது. அந்த வேற்று மனிதனை ஏற்றிக் கொள்ள மாட்டேன் என்று  முரண்டு பிடித்தது! "இது பொல்லாத குதிரையடா! இதன் பேரில் நான் ஏறக் கூடாதாம்!  பரம்பரையான அரசகுலத்தவன்தான் இதன் மேல் ஏறலாமாம். அப்படியென்றால் தஞ்சாவூர்  முத்தரையன் திரும்பி வந்துதான் இதன் மேல் ஏறவேண்டும்!" என்று அவன்  சமத்காரமாய்ப் பேசியதைக் கேட்டு மற்ற வீரர்கள் நகைத்தார்கள். ஏனென்றால், தஞ்சாவூர் முத்தரையர் குலம் நசித்துப் போய் நூறு  ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது சோழர்களின் புலிக்கொடி தஞ்சாவூரில் பறந்து  கொண்டிருந்தது. "குதிரையின் எண்ணம் அவ்விதம் இருக்கலாம். ஆனால், என்னைக் கேட்டால்,  செத்துப் போன தஞ்சாவூர் முத்தரையனைக் காட்டிலும் உயிரோடு இருக்கிற  தாண்டவராயனே மேல் என்பேன்!" என்றான் மற்றொரு வீரன். "தாண்டவராயா! உன்னை ஏற்றிக் கொள்ள மறுக்கும் குதிரை நிஜக்  குதிரைதானா என்று பார்த்துவிடு! ஒருவேளை, பெருமாளின் திருநாளுக்கு வந்த  பொய்க்கால் குதிரையாயிருந்தாலும் இருக்கலாம்!" என்றான் மற்றொரு பரிகாசப்  பிரியன். "அதையும் சோதித்துப் பார்த்து விடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டு  குதிரை மீது ஏறப்போன தாண்டவராயன் அதனுடைய வாலை முறுக்கினான். ரோஷமுள்ள  அக்குதிரை உடனே பின்னங்கால்களை நாலு தடவை விசிறி உதைத்துவிட்டு ஓட்டம்  பிடித்தது. "குருதை ஓடுகிறதடா! நிஜக் குருதை தானடா!" என்று அவ்வீரர்கள்  கூச்சலிட்டு, "உய்! உய்!" என்று கோஷித்து, ஓடுகிற குதிரையை மேலும்  விரட்டினார்கள்!. குதிரை, திருநாள் கூட்டத்துக்கிடையே புகுந்து ஓடிற்று. ஜனங்கள் அதன்  காலடியில் மிதிபடாமலிருப்பதற்காகப் பரபரப்புடன் அங்கும் இங்கும் நகர்ந்து  கொண்டார்கள். அப்படியும் அவர்களில் சிலர் உதைபட்டு விழுந்தார்கள். குதிரை  நெறிகெட்டு வெறி கொண்டு ஓடியது. இவ்வளவும் வந்தியத்தேவன் கண்ணெதிரே அதி சீக்கிரத்தில் நடந்து  விட்டது. அவனுடைய முகத் தோற்றத்திலிருந்து குதிரை அவனுடைய குதிரை என்பதை  ஆழ்வார்க்கடியான் கண்டு கொண்டான். "பார்த்தாயா, தம்பி! அந்தப் பழுவூர்த் தடியர்கள் செய்த வேலையை!  என்னிடம் நீ காட்ட வந்த வீரத்தை அவர்களிடம் காட்டுவதுதானே!" என்று குத்திக்  காட்டினான். வந்தியத்தேவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. எனினும்  பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையைக் கடைப்பிடித்தான். பழுவூர் வீரர்கள்  பெருங்கூட்டமாயிருந்தனர். அவ்வளவு பேருடன் ஒரே சமயத்தில் சண்டைக்குப்  போவதில் பொருள் இல்லை. அவர்கள் இவனுடன் சண்டை போடுவதற்காகக்  காத்திருக்கவும் இல்லை. குதிரை ஓடியதைப் பார்த்துச் சிரித்து விட்டு,  அவர்களும் விரைந்து மேலே நடந்தார்கள். குதிரை போன திசையை நோக்கி  வந்தியத்தேவன் சென்றான். அது கொஞ்ச தூரம் ஓடிவிட்டுத் தானாகவே நின்று  விடும் என்று அவனுக்குத் தெரியும். ஆகையால் அதைப் பற்றி அவன்  கவலைப்படவில்லை. பழுவேட்டரையரின் அகம்பாவம் பிடித்த ஆட்களுக்கு புத்தி  கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்தது.

NOW PLAYING

PS-S1E3-பொன்னியின் செல்வன்/E3-விண்ணகரக் கோயில்(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Vinnagara Koyil / Puthu Vellam

0:00 15:21

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

Aisamma Kadhaigal !! Tamil Short Story For Kids Aisamma Kadhaigal வணக்கம் மக்களே     நா சின்ன வயசில கேட்டு ரசித்து படித்து மகிழ்ந்த கதைகளை இப்ப என் குழந்தைகளுக்காக சொல்லும் போது, ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு..    என்னை மாதிரி உங்களுக்கும், உங்க குழந்தைகளுக்கும் இந்த கதைகள் பிடிக்கும்னு நினைக்கிறேன்.  நீங்க கேக்க நினைக்கிற கதைகளையும்  உங்க கருத்துக்களையும் முக்கியமா உங்க சுட்டி குட்டீஸ் என்ன சொல்றாங்கனும் கண்டிப்பா சொல்லுங்க...   நா சொல்ற விதத்துல குறை இருந்தாலும் பதிவு பண்ணுங்க. அது என்னை இன்னும் மேம்படுத்த உதவும்.அன்புடன்ஐஸாம்மாrhymes #பாடல்கள் #பாட்டு #சிறுவர்#tales #story #kidsstories #kathaigal #kadhaigal #kathai #kadhai #kadai #கதை #கதைகள் பூமர் பைட்ஸ் Dindi இது ஒரு ரசிக்கத் தக்க, புரிந்து கொள்ள எளிதான போட்காஸ்ட் ஆகும். நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் பற்றிய குழப்பங்களை நீக்கி, பின்பட்ட தலைமுறைக்கு இதனை அணுகத்தக்கவகையிலும், தொடர்புப்படுத்தக்கூடியவகையிலும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கிறது. கூகுள் இருந்ததற்கு முன்னர் பள்ளிக்கு போனவர்கள் இந்த போட்காஸ்ட் உங்கள் பார்வைக்கு! XIPT_பிஸிக்ஸ் XI: NEET வெற்றியின் ரகசியம்! Vetrivel Foundation வணக்கம் நண்பர்களே!இது "Physics XI NEET" போட்காஸ்ட், NEET மற்றும் பிற போட்டி தேர்வுகளுக்கான வகுப்பு 11 பிஸிக்ஸ் கருத்துக்களை எளிதாக கற்றுக்கொடுக்க உருவாக்கப்பட்ட ஒரு கற்றல் தோழன்.இந்த போட்காஸ்டில் என்ன இருக்கிறது தெரியுமா?முக்கிய தலைப்புகள்: மைக்கானிக்ஸ், வேவ்ஸ், தெர்மோடைனாமிக்ஸ் – எல்லாமே சுலபமாகவும் சுவாரஸ்யமாகவும்!சிக்கலான பிரச்சினைகளுக்கு எளிய தீர்வுகள்: டிப்ஸ், ட்ரிக்ஸ் எல்லாம் உங்களுக்காக.சூப்பர் ஷார்ட் கட்ச்: தேர்வில் நேரம் மிச்சம் செய்ய முக்கிய சூத்திரங்கள் மற்றும் குறுக்கெழுத்துக்கள்.கடந்த ஆண்டின் NEET கேள்விகள்: அவற்றின் விரிவான பகுப்பாய்வுடன்.எங்கள் குறிக்கோள்? பிஸிக்ஸை சுவாரஸ்யமாகவும், எளிதாகவும், தேர்வுக்கு மையமாகவும் மாற்றுவது!தேர்வுக்கு ரெடி ஆகணுமா? அல்லது அடிப்படை வலுப்படுத்தணுமா? எதுவாக இருந்தாலும், இந்த போட்காஸ்ட் உங்களுக்காகத்தான்.அப்படியே கேளுங்கள், கற்றுக்கொள்ளுங்கள், பயிற்சி செய்யுங்கள், NEET-ஐ தைரியமாக வெல்லுங்கள்! XIIBT_நீட் உயிரியல் XII தமிழ் – முழுமையான வழிக Vetrivel Foundation உங்கள் நீட் பயிற்சியை வெற்றிகரமாக செய்ய, வெற்றிவேல் அறக்கட்டளை வழங்கும் "நீட் உயிரியல் XII தமிழ் – முழுமையான வழிக" பாட்காஸ்ட் தொடரின் இந்த அத்தியாயத்தை கேட்கத் தொடங்குங்கள்!இந்த அத்தியாயத்தில், முக்கியமான நீட் புவியியல் (Physics) கருத்துகளை தெளிவாகவும், தேர்வுக்கேற்பவும் விளக்குகிறோம். ஒவ்வொரு கருத்தும் உங்களின் தேர்வு வெற்றிக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.தவறாமல் சப்ஸ்கிரைப் செய்யவும் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அனைவரும் சேர்ந்து உங்களின் நீட் பயிற்சியை வெற்றிகரமாக மாற்றுங்கள்!வெற்றி உங்கள் வசம்!

Frequently Asked Questions

How long is this episode of இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும்?

This episode is 15 minutes long.

When was this இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் episode published?

This episode was published on July 20, 2022.

What is this episode about?

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள்  விளைகின்றன.வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி  இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின்...

Can I download this இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!