PS-S1E9-பொன்னியின் செல்வன்/E9-வழிநடைப் பேச்சு(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Vazhinadai Pechi / Puthu Vellam episode artwork

EPISODE · Jul 27, 2022 · 15 MIN

PS-S1E9-பொன்னியின் செல்வன்/E9-வழிநடைப் பேச்சு(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Vazhinadai Pechi / Puthu Vellam

from இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் · host RJ SHAKTHI

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Vazhinadai Pechi பாலாற்றுக்கு வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன்  அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன் ஆகையால் ஆற்று வெள்ளத்தில்  நீந்துவதற்கு அவனுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு சமயம் வடபெண்ணைக் கரையில்  எல்லைக் காவல் புரிந்துவந்தபோது, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினான். ஒரு  பெரிய நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டான். அந்தப் பொல்லாத விஷமச் சுழல்  அவனைச் சுற்றிச் சுற்றி வரச் செய்து வதைத்தது. அதே சமயத்தில் கீழேயும்  இழுத்துக் கொண்டிருந்தது. சீக்கிரத்தில் வந்தியதேவனுடைய பலத்தையெல்லாம்  அந்தச் சுழல் உறிஞ்சிவிட்டது. "இனிப் பிழைக்க முடியாது, சுழலில் மூழ்கிச்  சாக வேண்டியதுதான்!" என்று வந்தியத்தேவன் நிராசை அடைந்த சமயத்தில்  தெய்வாதீனமாக நதிச் சுழலிலிருந்து வௌிப்பட்டான். வெள்ளம் அவனை அடித்துக்  கொண்டு போய்க் கரையில் ஒதுக்கிக் காப்பாற்றியது! அன்றிரவு வந்தியத்தேவன் மீண்டும் சென்று படுத்தபோது அவனுக்கு  நதியின் சுழலில் அகப்பட்டுத் திண்டாடியது போன்ற அதே உணர்ச்சி ஏற்பட்டது.  ஒரு பெரிய இராஜாங்கச் சதிச் சுழலில் தன்னுடைய விருப்பமில்லாமலே விழுந்து  அகப்பட்டுக் கொண்டதாகத் தோன்றியது. அந்த நதிச் சுழலிலிருந்து தப்பியது போல்  இந்தச் சதிச் சுழலிலிருந்தும் தப்ப முடியுமா? கடவுள் தன்னை மறுமுறையும்  காப்பாற்றுவாரா? அன்று அவன் கடம்பூர் மாளிகையில் நடந்த நள்ளிரவுக் கூட்டத்திலிருந்து  அறிந்து கொண்ட விஷயங்கள் அவனைத் திக்குமுக்காடச் செய்து விட்டன. சோழ மகா  சாம்ராஜ்யத்துக்கு வெளிப்பகைவர்களால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கிச் சில  வருஷங்கள்தான் ஆகியிருந்தன. இளவரசர் ஆதித்த கரிகாலர் மகாவீரர், போர்க்  கலையில் நிபுணர்; ராஜதந்திரத்தில் சாணக்கியர். தம்முடைய அறிவாற்றல்களையும்  சோழ நாட்டுப் படைகளின் போர்த் திறனையும் பூரணமாகப் பயன்படுத்தி இரட்டை  மண்டலத்துக் கிருஷ்ண மன்னனின் ஆதிக்கத்தைத் தொண்டை மண்டலத்திலிருந்து  அடியோடு தொலைத்தார். வெளிப்பகை ஒருவாறு ஒழிந்தது. இந்த நிலைமையில்  உட்கலகமும் சதியும் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. வெளிப்பகையைக்  காட்டிலும் அபாயகரமான இந்த உட்பகையின் விளைவு என்ன ஆகும்? சோழ நாட்டின் புகழ்பெற்ற வீரர்களும் அமைச்சர்களும் தலைவர்களும்  அதிகாரிகளும் அல்லவா இந்தப் பயங்கரமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்?  பழுவேட்டரையரும் அவருடைய சகோதரரும் எப்பேர்ப்பட்டவர்கள்? அவர்களுடைய சக்தி  என்ன? செல்வாக்கு என்ன? இங்கே இன்று கூடியிருந்த மற்றவர்கள்தான் எவ்வளவு  பெயரும் புகழும் செல்வாக்கும் பராக்கிரமமும் வாய்ந்தவர்கள்? இத்தகைய  கூட்டம் இதுதான் முதற் கூட்டமாயிருக்குமா? பழுவேட்டரையர் மூடுபல்லக்கில்  மதுராந்தகரை வைத்து இவ்விதம் இன்னும் எத்தனை இடங்களுக்குக் கொண்டு  போயிருக்கிறாரோ? அடாடா! முதிய வயதில் ஓர் இளம்பெண்ணை மணந்து கொண்டது  இவருக்கு இந்தச் சதிகார முயற்சிக்கு எவ்வளவு சாதகமாகப் போய்விட்டது? சோழ சிம்மாசனத்துக்கு உரியவர் இளவரசர் ஆதித்த கரிகாலர்தான் என்பது  பற்றி இன்று வரை வந்தியத்தேவனுடைய மனதில் எவ்விதச் சந்தேகமும்  உதிக்கவில்லை. போட்டி ஒன்று ஏற்படக் கூடும் என்று அவன் கனவிலும்  கருதவில்லை. கண்டராதித்தனுடைய புதல்வர் மதுராந்தகரைப் பற்றி அவன்  கேள்விப்பட்டதுண்டு. தந்தையைப் போலவே புதல்வரும் சிவபக்திச் செல்வர் என்று  அறிந்ததுண்டு. ஆனால் அவர் இராஜ்யத்துக்கு உரிமையுள்ளவர் என்றோ, அதற்காகப்  போட்டியிடக் கூடியவர் என்றோ கேள்விப்பட்டதில்லை. அந்த எண்ணமே அவனுடைய  மனத்தில் அது வரையில் தோன்றியதில்லை. ஆனால் நியாயா நியாயங்கள் எப்படி? பட்டத்துக்கு உரியவர் உண்மையிலே யார்? ஆதித்த கரிகாலரா? மதுராந்தகரா? யோசிக்க யோசிக்க, இரு தரப்பிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது. போட்டி என்று உண்மையில் ஏற்பட்டால், இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள்? தன்னுடைய கடமை என்ன? ஆஹா! என்னென்னவோ மனக் கோட்டை கட்டிக் கொண்டு காஞ்சியிலிருந்து இந்த யாத்திரை கிளம்பினோமே? பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு உகந்தபடி நடந்து கொண்டு சோழப் பேரரசில் பெரிய பதவிகளை அடையலாம் என்று ஆசைப்பட்டோமே! காலாகாலத்தில் வாணர் குலத்தின் பூர்வீக ராஜ்யத்தைக்கூடத் திரும்பப் பெறலாம் என்று நினைத்தோமே? இதற்கெல்லாம் சாதனமாக எந்தப் புளியங்கொம்பைப் பிடித்தோமோ அதுவே முறிந்துவிடும் போலிருக்கிறதே...? இத்தகைய சிந்தனைகளினால் வந்தியத்தேவன் இரண்டாம் முறை வந்து படுத்த பிறகு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் திண்டாடினான்

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Vazhinadai Pechi பாலாற்றுக்கு வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன்  அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன் ஆகையால் ஆற்று வெள்ளத்தில்  நீந்துவதற்கு அவனுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு சமயம் வடபெண்ணைக் கரையில்  எல்லைக் காவல் புரிந்துவந்தபோது, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினான். ஒரு  பெரிய நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டான். அந்தப் பொல்லாத விஷமச் சுழல்  அவனைச் சுற்றிச் சுற்றி வரச் செய்து வதைத்தது. அதே சமயத்தில் கீழேயும்  இழுத்துக் கொண்டிருந்தது. சீக்கிரத்தில் வந்தியதேவனுடைய பலத்தையெல்லாம்  அந்தச் சுழல் உறிஞ்சிவிட்டது. "இனிப் பிழைக்க முடியாது, சுழலில் மூழ்கிச்  சாக வேண்டியதுதான்!" என்று வந்தியத்தேவன் நிராசை அடைந்த சமயத்தில்  தெய்வாதீனமாக நதிச் சுழலிலிருந்து வௌிப்பட்டான். வெள்ளம் அவனை அடித்துக்  கொண்டு போய்க் கரையில் ஒதுக்கிக் காப்பாற்றியது! அன்றிரவு வந்தியத்தேவன் மீண்டும் சென்று படுத்தபோது அவனுக்கு  நதியின் சுழலில் அகப்பட்டுத் திண்டாடியது போன்ற அதே உணர்ச்சி ஏற்பட்டது.  ஒரு பெரிய இராஜாங்கச் சதிச் சுழலில் தன்னுடைய விருப்பமில்லாமலே விழுந்து  அகப்பட்டுக் கொண்டதாகத் தோன்றியது. அந்த நதிச் சுழலிலிருந்து தப்பியது போல்  இந்தச் சதிச் சுழலிலிருந்தும் தப்ப முடியுமா? கடவுள் தன்னை மறுமுறையும்  காப்பாற்றுவாரா? அன்று அவன் கடம்பூர் மாளிகையில் நடந்த நள்ளிரவுக் கூட்டத்திலிருந்து  அறிந்து கொண்ட விஷயங்கள் அவனைத் திக்குமுக்காடச் செய்து விட்டன. சோழ மகா  சாம்ராஜ்யத்துக்கு வெளிப்பகைவர்களால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கிச் சில  வருஷங்கள்தான் ஆகியிருந்தன. இளவரசர் ஆதித்த கரிகாலர் மகாவீரர், போர்க்  கலையில் நிபுணர்; ராஜதந்திரத்தில் சாணக்கியர். தம்முடைய அறிவாற்றல்களையும்  சோழ நாட்டுப் படைகளின் போர்த் திறனையும் பூரணமாகப் பயன்படுத்தி இரட்டை  மண்டலத்துக் கிருஷ்ண மன்னனின் ஆதிக்கத்தைத் தொண்டை மண்டலத்திலிருந்து  அடியோடு தொலைத்தார். வெளிப்பகை ஒருவாறு ஒழிந்தது. இந்த நிலைமையில்  உட்கலகமும் சதியும் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. வெளிப்பகையைக்  காட்டிலும் அபாயகரமான இந்த உட்பகையின் விளைவு என்ன ஆகும்? சோழ நாட்டின் புகழ்பெற்ற வீரர்களும் அமைச்சர்களும் தலைவர்களும்  அதிகாரிகளும் அல்லவா இந்தப் பயங்கரமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்?  பழுவேட்டரையரும் அவருடைய சகோதரரும் எப்பேர்ப்பட்டவர்கள்? அவர்களுடைய சக்தி  என்ன? செல்வாக்கு என்ன? இங்கே இன்று கூடியிருந்த மற்றவர்கள்தான் எவ்வளவு  பெயரும் புகழும் செல்வாக்கும் பராக்கிரமமும் வாய்ந்தவர்கள்? இத்தகைய  கூட்டம் இதுதான் முதற் கூட்டமாயிருக்குமா? பழுவேட்டரையர் மூடுபல்லக்கில்  மதுராந்தகரை வைத்து இவ்விதம் இன்னும் எத்தனை இடங்களுக்குக் கொண்டு  போயிருக்கிறாரோ? அடாடா! முதிய வயதில் ஓர் இளம்பெண்ணை மணந்து கொண்டது  இவருக்கு இந்தச் சதிகார முயற்சிக்கு எவ்வளவு சாதகமாகப் போய்விட்டது? சோழ சிம்மாசனத்துக்கு உரியவர் இளவரசர் ஆதித்த கரிகாலர்தான் என்பது  பற்றி இன்று வரை வந்தியத்தேவனுடைய மனதில் எவ்விதச் சந்தேகமும்  உதிக்கவில்லை. போட்டி ஒன்று ஏற்படக் கூடும் என்று அவன் கனவிலும்  கருதவில்லை. கண்டராதித்தனுடைய புதல்வர் மதுராந்தகரைப் பற்றி அவன்  கேள்விப்பட்டதுண்டு. தந்தையைப் போலவே புதல்வரும் சிவபக்திச் செல்வர் என்று  அறிந்ததுண்டு. ஆனால் அவர் இராஜ்யத்துக்கு உரிமையுள்ளவர் என்றோ, அதற்காகப்  போட்டியிடக் கூடியவர் என்றோ கேள்விப்பட்டதில்லை. அந்த எண்ணமே அவனுடைய  மனத்தில் அது வரையில் தோன்றியதில்லை. ஆனால் நியாயா நியாயங்கள் எப்படி? பட்டத்துக்கு உரியவர் உண்மையிலே யார்? ஆதித்த கரிகாலரா? மதுராந்தகரா? யோசிக்க யோசிக்க, இரு தரப்பிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது. போட்டி என்று உண்மையில் ஏற்பட்டால், இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள்? தன்னுடைய கடமை என்ன? ஆஹா! என்னென்னவோ மனக் கோட்டை கட்டிக் கொண்டு காஞ்சியிலிருந்து இந்த யாத்திரை கிளம்பினோமே? பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு உகந்தபடி நடந்து கொண்டு சோழப் பேரரசில் பெரிய பதவிகளை அடையலாம் என்று ஆசைப்பட்டோமே! காலாகாலத்தில் வாணர் குலத்தின் பூர்வீக ராஜ்யத்தைக்கூடத் திரும்பப் பெறலாம் என்று நினைத்தோமே? இதற்கெல்லாம் சாதனமாக எந்தப் புளியங்கொம்பைப் பிடித்தோமோ அதுவே முறிந்துவிடும் போலிருக்கிறதே...? இத்தகைய சிந்தனைகளினால் வந்தியத்தேவன் இரண்டாம் முறை வந்து படுத்த பிறகு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் திண்டாடினான்

NOW PLAYING

PS-S1E9-பொன்னியின் செல்வன்/E9-வழிநடைப் பேச்சு(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Vazhinadai Pechi / Puthu Vellam

0:00 15:00

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

Aisamma Kadhaigal !! Tamil Short Story For Kids Aisamma Kadhaigal வணக்கம் மக்களே     நா சின்ன வயசில கேட்டு ரசித்து படித்து மகிழ்ந்த கதைகளை இப்ப என் குழந்தைகளுக்காக சொல்லும் போது, ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு..    என்னை மாதிரி உங்களுக்கும், உங்க குழந்தைகளுக்கும் இந்த கதைகள் பிடிக்கும்னு நினைக்கிறேன்.  நீங்க கேக்க நினைக்கிற கதைகளையும்  உங்க கருத்துக்களையும் முக்கியமா உங்க சுட்டி குட்டீஸ் என்ன சொல்றாங்கனும் கண்டிப்பா சொல்லுங்க...   நா சொல்ற விதத்துல குறை இருந்தாலும் பதிவு பண்ணுங்க. அது என்னை இன்னும் மேம்படுத்த உதவும்.அன்புடன்ஐஸாம்மாrhymes #பாடல்கள் #பாட்டு #சிறுவர்#tales #story #kidsstories #kathaigal #kadhaigal #kathai #kadhai #kadai #கதை #கதைகள் பூமர் பைட்ஸ் Dindi இது ஒரு ரசிக்கத் தக்க, புரிந்து கொள்ள எளிதான போட்காஸ்ட் ஆகும். நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் பற்றிய குழப்பங்களை நீக்கி, பின்பட்ட தலைமுறைக்கு இதனை அணுகத்தக்கவகையிலும், தொடர்புப்படுத்தக்கூடியவகையிலும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கிறது. கூகுள் இருந்ததற்கு முன்னர் பள்ளிக்கு போனவர்கள் இந்த போட்காஸ்ட் உங்கள் பார்வைக்கு! XIIBT_நீட் உயிரியல் XII தமிழ் – முழுமையான வழிக Vetrivel Foundation உங்கள் நீட் பயிற்சியை வெற்றிகரமாக செய்ய, வெற்றிவேல் அறக்கட்டளை வழங்கும் "நீட் உயிரியல் XII தமிழ் – முழுமையான வழிக" பாட்காஸ்ட் தொடரின் இந்த அத்தியாயத்தை கேட்கத் தொடங்குங்கள்!இந்த அத்தியாயத்தில், முக்கியமான நீட் புவியியல் (Physics) கருத்துகளை தெளிவாகவும், தேர்வுக்கேற்பவும் விளக்குகிறோம். ஒவ்வொரு கருத்தும் உங்களின் தேர்வு வெற்றிக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.தவறாமல் சப்ஸ்கிரைப் செய்யவும் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அனைவரும் சேர்ந்து உங்களின் நீட் பயிற்சியை வெற்றிகரமாக மாற்றுங்கள்!வெற்றி உங்கள் வசம்! XIPT_பிஸிக்ஸ் XI: NEET வெற்றியின் ரகசியம்! Vetrivel Foundation வணக்கம் நண்பர்களே!இது "Physics XI NEET" போட்காஸ்ட், NEET மற்றும் பிற போட்டி தேர்வுகளுக்கான வகுப்பு 11 பிஸிக்ஸ் கருத்துக்களை எளிதாக கற்றுக்கொடுக்க உருவாக்கப்பட்ட ஒரு கற்றல் தோழன்.இந்த போட்காஸ்டில் என்ன இருக்கிறது தெரியுமா?முக்கிய தலைப்புகள்: மைக்கானிக்ஸ், வேவ்ஸ், தெர்மோடைனாமிக்ஸ் – எல்லாமே சுலபமாகவும் சுவாரஸ்யமாகவும்!சிக்கலான பிரச்சினைகளுக்கு எளிய தீர்வுகள்: டிப்ஸ், ட்ரிக்ஸ் எல்லாம் உங்களுக்காக.சூப்பர் ஷார்ட் கட்ச்: தேர்வில் நேரம் மிச்சம் செய்ய முக்கிய சூத்திரங்கள் மற்றும் குறுக்கெழுத்துக்கள்.கடந்த ஆண்டின் NEET கேள்விகள்: அவற்றின் விரிவான பகுப்பாய்வுடன்.எங்கள் குறிக்கோள்? பிஸிக்ஸை சுவாரஸ்யமாகவும், எளிதாகவும், தேர்வுக்கு மையமாகவும் மாற்றுவது!தேர்வுக்கு ரெடி ஆகணுமா? அல்லது அடிப்படை வலுப்படுத்தணுமா? எதுவாக இருந்தாலும், இந்த போட்காஸ்ட் உங்களுக்காகத்தான்.அப்படியே கேளுங்கள், கற்றுக்கொள்ளுங்கள், பயிற்சி செய்யுங்கள், NEET-ஐ தைரியமாக வெல்லுங்கள்!

Frequently Asked Questions

How long is this episode of இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும்?

This episode is 15 minutes long.

When was this இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் episode published?

This episode was published on July 27, 2022.

What is this episode about?

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Vazhinadai Pechi பாலாற்றுக்கு வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன்  அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன் ஆகையால் ஆற்று வெள்ளத்தில்  நீந்துவதற்கு...

Can I download this இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!