EPISODE · Jun 11, 2026 · 26 MIN
AbdulKareem ArunthuvidathaNool Solvanam SaraswathiThiagarajan-அப்துல் கரீம்-அறுந்துவிடாத நூல்
from Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் · host Solvanam சொல்வனம்
AbdulKareem ArunthuvidathaNool Solvanam SaraswathiThiagarajan-அப்துல் கரீம்-அறுந்துவிடாத நூல்சு. அப்துல் கரீம் அவர்கள் முழுநேர எழுத்தாளர் அல்ல; மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். நண்பர்களுடன் தொடங்கிய இலக்கியப் பகிர்வு வாட்ஸ்அப் குழுவின் ஊக்கத்தால் மீண்டும் எழுதத் தொடங்கி, சிறுகதைகளைப் படைக்க ஆரம்பித்தார். அவரது கதைகள் இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களும் நிகழ்வுகளும் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பதிவு செய்து, பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாகவே அவர் சிறுகதைகளைப் பார்க்கிறார். சிறுகதைகள் எழுதும்போது கடைப்பிடிக்கவேண்டிய யுக்திகள் பற்றி சொல்வனம் மைத்ரேயன் அவர்கள் அளித்த கருத்துகளும் திருத்த ஆலோசனைகளும் தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன என்கிறார். வாருங்கள் அப்துல்கரீம். முன்னுரைஉறவுகள் உருவாக பல ஆண்டுகள் தேவைப்படலாம்; ஆனால் அவற்றில் ஒரு விரிசல் தோன்ற சில நிமிடங்கள் போதும். அந்த விரிசலை மூடுவதற்கான வாய்ப்பை மனிதர்கள் தங்களின் அகங்காரம், பிடிவாதம், தவறான புரிதல்கள் ஆகியவற்றால் இழந்து விடுகிறார்கள். சு. அப்துல் கரீம் எழுதிய “அறுந்துவிடாத நூல்” சிறுகதை, முதுமை, நினைவுகள், குடும்ப உறவுகள், மன்னிப்பு, பேசப்படாத அன்பு ஆகியவற்றின் நுட்பமான உளவியல் சித்திரமாக அமைந்துள்ளது.
Embed this episode
NOW PLAYING
AbdulKareem ArunthuvidathaNool Solvanam SaraswathiThiagarajan-அப்துல் கரீம்-அறுந்துவிடாத நூல்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.