EPISODE · Sep 18, 2025 · 37 MIN
கைவல்ய நவநீதம் -11
from Atmanandalahari · host atmanandalahari
மரக்கிளை நிலவு நியாயம் , அருந்ததி தர்சன நியாயம் - தெரிந்ததைக் கொண்டு தெரியாததைக் காட்டுதல். அத்தியாரோபம்/ அபவாதம் யுக்தி மூலம் பிரம்மன் சத்தியம் உலகம் மித்யா என்று விளக்குதல் கயிறு பாம்பாகத் தெரிதல், கட்டை மனிதனாகத் தெரிதல், கானல் நீராகத் தெரிதல், வானம் நிறமுடையதாகவும் நிலமுடையதாகவும் தெரிதல் போன்ற உதாரணங்களை சொல்லி குரு விளக்குகிறார்.
What this episode covers
பாடல் :17 நனவுகண் டதும்நான் கண்ட நனவுள நினைவு நீங்கிக், கனவுகண் டதும்சு ழுத்தி கண்டதும் வேறொன் றேபோல், தினம் அனுபவிப்பது ஒக்கும் தெரியவும் இல்லை சற்றே, மனதினில் உதிக்கும் பின்னே மறைக்கும தருளு வீரே. பாடல் : 18 தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டு வார்போல், ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டு வார்போல், தூலத்தை முன்பு காட்டிச் சூக்கும சொரூபம் ஆன, மூலத்தைப் பின்பு காட்ட முனிவரர் தொடங்கி னாரே. பாடல் :19 அத்தியா ரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும், உத்தியால் பந்தம் வீடு என்றுரைக்கும் வேதாந்தம் எல்லாம், மித்தையாம் ஆரோ பத்தால் பந்தமாம் அபவா தத்தால், முத்தியாம் இவ்வி ரண்டின் முந்தியா ரோபம் கேளாய். பாடல் :20 ஆரோபம் அத்தி யாசம் கற்பனை ஆவ எல்லாம், ஒரோர்வத் துவினில் வேறே ஓரோர்வத் துலினை ஓர்தல், நாரூடு பணியாய்த் தோன்றல் நரனாகித் தறியில் தோன்றல், நீரூடு கானல் தோன்றல் நிற மலம் வெளியில் தோன்றல்.
NOW PLAYING
கைவல்ய நவநீதம் -11
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.