EPISODE · Oct 5, 2025 · 39 MIN
கைவல்ய நவநீதம் -13
from Atmanandalahari · host atmanandalahari
உலகம் எப்படி உருவானது? சத்வ ரஐஸ் தமோ குண வெளிப்பாடு ஈஸ்வரன் - சத்வ குண பிரதிபிம்ப சைதன்யம், அந்தர்யாமி, அஸங்கத்வம், நிமித்த காரணம் ஜீவகோடி- ரஜோ குண பிரதிபிம்ப சைதன்யம் மாயை என்பதே மாயை நடக்காததை நடந்தது போல் காட்டும் இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும் கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும் இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும் ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும் இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும் ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும்
What this episode covers
பாடல் : 22 அதுதான் எப் படிஎன் றக்கால் அநாதியாம் சீவ ரெல்லாம், பொதுவான சுழுத்தி போலப் பொருந்தும் அவ் வியத்தம் தன்னில், இதுகால தத்து வப்பேர் ஈசன்உட் பார்வை யாலே, முதுமூல சுபாவம் விட்டு முக்குணம் வியத்தம் ஆமே. பாடல் : 23 உத்தம வெளுப்புச் செம்மை உரைத்திடும் கறுப்பும் ஆகும், சத்துவ குணத்தி னோடு ரசோகுணம் தமோகு ணந்தான், சுத்தமோ டழுக்கி ருட்டாச் சொல்லுமுக் குணமும் மூன்றாய், ஒத்துள வேனும் தம்முள் ஒருகுணம் அதிகம் ஆமே. பாடல்:24 ஒருவழி இதுவாம் இத்தை ஒருவழி வேறாச் சொல்வர், மருவும் அவ் வியத்தம் தானே மகத்தத்வம் ஆகும் அந்த, அருள்மகத் தத்து வந்தான் அகங்காரம் ஆகும் என்றும், கரு அகங்காரம் மூன்றாக் காட்டிய குணம் ஆம் என்றும் பாடல் :25 இக்குணங் களிலே விண்போன் றிருக்கும்சிற் சாயை தோன்றும், முக்குணங் களினும் தூய்தாம் முதற்குணம் மாயை ஆகும், அக்குணப் பிரமச் சாயை அந்தரி யாமி மாயை, எக்குணங் களும்பற் றாதோன் நிமித்தகா ரணனாம் ஈசன். பாடல் : 26 ஈசனுக் கிதுசு ழுத்தி இதுவேகா ரணச ரீரம், கோசம்ஆ நந்தம் ஆகும் குணம் இராசதம் அ வித்தை, தேசறும் அவித்தை தோறும் சிற்சாயை சீவ கோடி, நாசமாம் உயிர்க்கப் போது நாமமும் பிராஞ்ஞன் ஆமே.
NOW PLAYING
கைவல்ய நவநீதம் -13
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.