EPISODE · Dec 12, 2025 · 31 MIN
கைவல்ய நவநீதம் -17
from Atmanandalahari · host atmanandalahari
ஆவரணம் தான் அறியாமைக்கு காரணம் அதிஷ்டானம் - சாமன்யம் - இது ஆஸ்ரேயம் - விசேஷம் - கயிறு அத்யாஸம் - கல்பிதம் - பாம்பு வேற்றுமையை மதிக்காமல் இருப்பதே வேதாந்தத்தின் பயன்
What this episode covers
பாடல் : 41 தூடண தமத்தில் வந்த தோற்றமாம் சத்தி செய்யும், ஏடணை விகாரம் சொன்னீர் இரண்டுசத் திகள் என் றீரே, மூடலாம் சத்தி செய்யும் மோகமும் சொல்லும் ஐயா, கேடறக் குருவே என்னக் கிருபையோ டருள்செய் வாரே. பாடல் 42 தானிகர் தனக்காம் ஈசன் தனையும்தங் களைத்தாம் கண்ட, ஞானிகள் தமையும் அன்றி நாஸ்திந பாதி யென்னும், ஊனிடை உயிர்கள் உள்ளத் துணர்விழி குருடாம் வண்ணம், வானிலம் திசைகள் மூடு(ம்) மழைநிசி இருள்போல் மூடும். பாடல் : 43 பூன்றமாம் பிரமத் துக்கும் புறத்துள விகாரங் கட்கும், ஆன்றகூ டத்த னுக்கும் அகத்துள விகாரங் கட்கும், தோன்றிய பேதம் சற்றும் தோன்றாமல் மறைத்து மூடும், ஊன்றிய பவவி யாதி உண்டாக்கும் உபாதி ஈதே. பாடல் : 44 ஆதாரம் மறைந்து போனால் ஆரோபம் எங்கே தோன்றும், ஆதாரம் மறையா தாகில் ஆரோபம் இலையே என்றால், ஆதாரம் சமம்வி சேடம் ஆமென இரண்டு கூறாம், ஆதாரம் சமமாம் எங்கும் ஆரோபம் விசேடம் ஆமே. பாடல் : 45 சகமதில் இதுஎன் சுட்டாம் சமானந்தான் மறைந்தி டாது, மிகஇது கயிறாம் என்னும் விசேடந்தான் மறைந்து போகும், அகம்எனும் சமானம் தன்னை அஞ்ஞானம் மறைத்தி டாது, பகர்விசே டமதாம் சீவன் பரமெனும் அதனை மூடும்.
NOW PLAYING
கைவல்ய நவநீதம் -17
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.