EPISODE · Feb 19, 2026 · 26 MIN
கைவல்ய நவநீதம் -25
from Atmanandalahari · host atmanandalahari
உள்ளிருக்கும் ப்ரம்மமே வெளியில் வந்த குரு. ஆத்ம ஞானம் அளித்த குருவிற்கு செய்ய பதில் உதவியாக ஏதுமே நிகரில்லை என்று சிஷ்யன் சொல்ல, எப்போதும் ஞாந நிஷ்டையில் நழுவாது இருப்பதே சிஷ்யன் குருவிற்கு செய்யும் பதிலுதவி.
What this episode covers
பாடல் : 76 தஞ்சமாம் குருவும் சொன்ன தத்துவ வழிதப் பாமல், பஞ்சகோ சமும்க டந்து பாழையும் தள்ளி உள்ளில், கொஞ்சமாம் இருப்பும் விட்டுக் கூடத்தன் பிரமம் என்னும், நெஞ்சமும் நழுவி ஒன்றாய் நின்றபூ ரணத்தைக் கண்டான். பாடல் : 77 அனுபவா நந்த வெள்ளத் தழுந்தியே அகண்டம் ஆகித், தனுகர ணங்கள் ஆதி சகலமும் இறந்து சித்தாய், மனதுபூ ரணமாய்த் தேகம் ஆனசற் குருவும் காண, நனவினில் சுழுத்தி ஆகி நன்மகன் சுபாவம் ஆனான். பாடல் : 78 அளிமகன் நெடும்போது இவ்வாறு ஆனபின் மனது மெள்ள, வெளியில்வந் திடஉ ணர்ந்தான் விமலதே சிகனைக் கண்டான், துளிவிழி சொரியப் பாதம் தொழுதுவீழ்ந் தெழுந்து சூழ்ந்தான், குளிர்முகச் சுவாமி கேட்கக் கும்பிட்டு நின்று சொல்வான். பாடல் : 79 ஐயனே எனதுள் ளேநின் றநந்தசன் மங்கள் ஆண்ட, மெய்யனே உபதே சிக்க வெளிவந்த குருவே போற்றி, உய்யவே முத்தி நல்கும் உதவிக்கோர் உதவி நாயேன், செய்யுமா றொன்றும் காணேன் திருவடி போற்றி போற்றி. பாடல் : 80 சிட்டனிவ் வாறு கூறத் தேசிகர் மகிழ்ந்து நோக்கிக், கிட்டவா எனஇ ருத்திக் கிருபையோ டருளிச் செய்வார், துட்டமாம் தடைகள் மூன்றும் தொடராமல் சொரூப ஞான, நிட்டனாய் இருக்கின் ஈதே நீசெயும் உதவி ஆமே.
NOW PLAYING
கைவல்ய நவநீதம் -25
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.