EPISODE · Feb 26, 2026 · 39 MIN
கைவல்ய நவநீதம் -26
from Atmanandalahari · host atmanandalahari
தடைகள்- அஞ்ஞானம் (அறியாமை) ஸந்தேஹம் (ஐயம்) விபரீதம் (திரிபு), தடைகளை அழிக்கும் வழிகள் - கேட்டல், சிந்தித்தல், தெளிதலாலே = சிரவணம், மனனம், நிதித்யாஸனம்.
What this episode covers
பாடல் : 81 நீநானென் றிரண்டி லாமல் நிறைந்தபூ ரணமாய் எங்கும், நானாகத் தெளிந்த ஞானம் நழுவுமோ குருவே என்றான், தானாகும் பிரம ரூபம் சற்குரு நூலால் தோன்றும், ஆனாலும் தடைகள் உண்டேல் அனுபவம் உறைத்தி டாதே. பாடல் :82 தடையெவை யெனில் அஞ்ஞான சந்தேக விபரீ தங்கள், படர்செயும் இந்த மூன்றும் பலசன்மப் பழக்கத் தாலே, உடனுடன் வரும்வந் தக்கால் உயர்ஞானம் கெடும்இ வற்றைத், திடமுடன் கெடுப்பாய் கேட்டல் சிந்தித்தல் தெளித லாலே. பாடல் : 83 அக்கினி கட்டுப் பட்டால் அற்பமும் சுடமாட் டாது, மக்கின ஞானத் தாலே வந்தபந் தமும்வே வாது, சிக்கெனப் பழகிக் கேட்டல் சிந்தித்தல் தெளித லாலே, விக்கின மடம்சந் தேகம் விபரீதம் போக்கு வாயே. பாடல் : 84 பிரமபா வனையை மூடிப் பேதம்காட் டுவதஞ் ஞானம், குரவன்வாக் கியம்நம் பாமல் குழம்புவ தாம்சந் தேகம், திரமறு சகம்மெய் என்றும் தேகம்நான் என்றும் உள்ளே, விரவிய மோகம் தானே விபரீதம் என்பர் மேலோர். பாடல் : 85 தத்துவ அநுபோ கம்தான் சாதித்தல் கேட்டல் என்பார், ஒத்துள பொருள்ஊ கத்தால் உசாவல்சிந் தித்தல் என்பார், சித்தம் ஏகாந்தம் ஆன தெரிசனம் தெளிதல் என்பார், நித்தமிப் படிச்செய் தக்கால் நிருவாணம் பெறுவாய் நீயே.
NOW PLAYING
கைவல்ய நவநீதம் -26
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.