கைவல்ய நவநீதம்-27 episode artwork

EPISODE · Mar 5, 2026 · 39 MIN

கைவல்ய நவநீதம்-27

from Atmanandalahari · host atmanandalahari

எத்தனை நாள் வேதாந்தம் கேட்க வேண்டும்? அந்தக்கரணமும் அந்தக்கரண விருத்தியும் இருக்கும் வரை ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம் தொடரவேண்டும் . ஸ்ரவணம்- சாஸ்திர தாத்பர்யம் - கவனமாய் கேட்டல்  மனனம்- தாத்பர்யத்தை யுக்தி பூர்வமாக சிந்தித்தல் - நிதித்யாஸனம் - சிந்தித்த விழையாததற்கு தியானம் செய்வது  ஜீவன்  புத்தி நிவர்த்தியே  - நிர்வாணம் தனித்தன்மை உண்மை என்பது  அடியோடு நீங்குவதே - மோட்சம்  ஜீவன் முக்தர்கள் நான்கு வகைப்படுவர். பிரம்ம வித்   வரன் -பிரம்மவித்துக்களில் சிறந்தவன்  வரியான் பிரம்மவித்துக்களில் சிறந்தவர்களுள் சிறந்தவன் வரிஷ்டன்பிரம்மவித்துக்களில்  சிறந்தவர்களுள் சிறந்தவர்களுள் சிறந்தவன் இந்த தாரதம்யம் வியவகாரத்தில் தான். ஞானத்தில் தாரதம்யம் இல்லை . 

பாடல் : 86 எத்தனை நாள்ஞா தாவும் ஞானமும் இருக்கும் உன்பால், அத்தனை நாளும் வேண்டும் அப்பால்ஓர் செயலும் வேண்டா, நித்தமும் வெளிபோல் பற்றா ஞேயம்மாத் திரமாய்ச் சீவன், முத்தர்ஆ னவர்வி தேக முத்திபெற் றிருப்பார் என்றும். பாடல் : 87 ஞானமார் ஜீவன் முத்தர் நால்வகை யாவர் கேளாய், வான்நிகர் பிரம வித்து வரன்வரி யான்வ ரிட்டன், ஆனவர் நாமமும் ஆகும் அவர்களில் பிரம வித்தின், தானமும் மற்றை மூவர் தாரதம் மியமும் சொல்வேன். பாடல் : 88 தீரராய்ப் பிரம வித்தாய்த் தெளிந்தவர் தெளியு முன்னம், வாரமாய் இருந்த தங்கள் வருணமாச் சிரமம் சொன்ன, பாரகா ரியமா னாலும் பலர்க்குப கார மாக, நேரதாச் செய்வர் தீர்ந்த நிலைவிடார் சீவன் முத்தர். பாடல் : 89 காமமா திகள்வந் தாலும் கணத்தில்போம் மனத்தில் பற்றார், தாமரை இலைத்தண் ணீர்போல் சகத்தொடும் கூடி வாழ்வார், பாமரர் எனக்காண் பிப்பார் பண்டிதத் திறமை காட்டார், ஊமரும் ஆவார் உள்ளத்து உவகையாம் சீவன் முத்தர். பாடல் : 90 புறவாழ்க்கை பேதகர் மத்தால் வந்த பிரா ரத்தம் நாநா வாகும், ஆதலால் விவகா ரங்கள் அவரவர்க் காவ வாகும், மாதவம் செயினும் செய்வார் வாணிபம் செயினும் செய்வார், பூதலம் புரப்பார் ஐயம் புகுந்துண்பார் சீவன் முத்தர்.

NOW PLAYING

கைவல்ய நவநீதம்-27

0:00 39:14

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Atmanandalahari?

This episode is 39 minutes long.

When was this Atmanandalahari episode published?

This episode was published on March 5, 2026.

What is this episode about?

எத்தனை நாள் வேதாந்தம் கேட்க வேண்டும்? அந்தக்கரணமும் அந்தக்கரண விருத்தியும் இருக்கும் வரை ஸ்ரவணம் மனனம் நிதித்யாஸனம் தொடரவேண்டும் . ஸ்ரவணம்- சாஸ்திர தாத்பர்யம் - கவனமாய் கேட்டல்  மனனம்- தாத்பர்யத்தை யுக்தி பூர்வமாக சிந்தித்தல் - நிதித்யாஸனம் -...

Can I download this Atmanandalahari episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!