EPISODE · Mar 19, 2026 · 30 MIN
கைவல்ய நவநீதம்-29
from Atmanandalahari · host atmanandalahari
மூன்று வினகள் எஞ்சு வினை நட வினை வரு வினை ஞாநம் என்ற நெருப்பு மூன்றையும் எரித்து விடும். முதலும் முடிவும் நடுவும் இல்லாமல், உள்ளும் புறமும் இல்லாமல், ஞானி பூரணமாய் அமைதியான ஆனந்தத்துடன் எப்போதும் எங்கும் இருப்பார்
What this episode covers
பாடல் : 96 பஞ்சினை ஊழித் தீப்போல் பலசன்ம விவித வித்தாம், சஞ்சிதம் எல்லாம் ஞானத் தழல் சுட்டு வெண்ணீ றாக்கும், கிஞ்சிதா காமி யம்தான் கிட்டாமல் விட்டுப் போகும், விஞ்சின பிராரத் தத்தின் வினையது பவித்துத் தீரும். பாடல் : 97 பொறுமையால் பிராரத் தத்தைப் புசிக்குநாள் செய்யும் கர்மம், மறுமையில் தொடர்ந்தி டாமல் மாண்டுபோம் வழியே தென்றால், சிறியவர் இகழ்ந்து ஞானி செய்தபா வத்தைக் கொள்வார், அறிவுளோர் அறிந்து பூசித்து அறமெலாம் கைக்கொள் வாரே. பாடல் : 98 அரியமெய்ஞ் ஞானத் தீயால் அவித்தையாம் உடல்நீ றாகும், பெரியதூ லமும்கா லத்தால் பிணமாகி விழுமந் நேரம், உரியசூக் குமச ரீரம் உலையிரும் புண்ட நீர்போல், துரியமாய் விபுவாய் நின்ற சொரூபத்தில் இறந்து போமே. பாடல் : 99 கடமெனும் உபாதி போனால் ககனமொன் றானாற் போல, உடலெனும் உபாதி போன உத்தரம் சீவன் முத்தர், அடிமுடி நடுவும் இன்றி அகம்புறம் இன்றி நின்ற, படிதிகழ் விதேக முத்திப் பதம் அடைந் திருப்பர் என்றும். பாடல் : 100 சொல்லிய மகனே எங்கும் சூழ்வெளி இருக்க மண்ணைக், கெல்லிய பின்பு தோன்றும் கிணற்றின் ஆ காசம் போலே, ஒல்லையாம் பிரம நூலால் உற்றது போலே தோன்றும், எல்லையில் நாமெப் போதும் ஏகமென் றிருந்து வாழ்வாய்.
NOW PLAYING
கைவல்ய நவநீதம்-29
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.