EPISODE · Aug 28, 2025 · 40 MIN
கைவல்ய நவநீதம் -8
from Atmanandalahari · host atmanandalahari
சிஷ்யன் குருவை வணங்கி ஆத்ம ஞானம் வேண்டும் என்று கேட்டல், குரு சங்கல்ப தீக்ஷை, சக்ஷு தீக்ஷை, ஸ்பர்ச தீக்ஷை, ஞானதீக்ஷை மூலம் ஆறுதல் அளித்தல், சிஷ்யன் தகுதியை உணர்த்தி குருவை சரணடைதல்.
What this episode covers
பாடல் :-7 வணங்கி கேட்டல் வணங்கிநின் றழுது சொல்வான் மாயவாழ் வெனும்சோ கத்தால், உணங்கினேன் ஐய னேஎன் உள்ளமே குளிரும் வண்ணம், பிணங்கிய கோச பாசப் பின்னலைச் சின்னம் ஆக்கி, இணங்கிய குருவே என்னை இரட்சித்தல் வேண்டும் என்றான். பாடல் 8 குருவின் ஆறுதல் அன்னதன் சிசுவை ஐயன் ஆமை மீன் பறவை போலத், தன்னகம் கருதி நோக்கித் தடவிச்சந் நிதிஇ ருத்தி, உன்னது பிறவி மாற்றும் உபாயம்ஒன் றுண்டு சொல்வேன், சொன்னது கேட்பா யாகில் தொடர்பவம் தொலையும் என்றான். பாடல் : 9 சிஷ்யன் தகுதியை உணர்த்தறான் தொடர்பவம் தொலையுமென்று சொன்னதைக் கேட்ட போதே, தடமடு மூழ்கி னான்போல் சரீரமும் குளிர்ந்துள் ளாறி, அடருமன் பொழுகு மாபோல் ஆநந்த பாஷ்பம் காட்டி, மடல்மலர்ப் பாதம் மீண்டும் வணங்கிநின் றீது சொல்வான். பாடல் : 10- சரணடைதல் சொன்னது கேட்க மாட்டாத் தொண்டன் ஆனாலும் சுவாமி, நின்னது கருணை யாலே நீரெனை ஆளலாமே, உன்னது பிறவி மாற்றும் உபாயமொன் றுண்டென் றீரே, இன்னதென் றதைநீர் காட்டி ஈடேற்றல் வேண்டும் என்றான்.
NOW PLAYING
கைவல்ய நவநீதம் -8
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.