EPISODE · Sep 4, 2025 · 35 MIN
கைவல்ய நவநீதம் - 9
from Atmanandalahari · host atmanandalahari
சூழல் காற்றில் சுற்றும் குப்பை போல திரியும் ஜீவன் குருவை சரணடைகிறான் . ஆத்ம ஞாநம் கற்று கொள்ள வேண்டிய தகுதிகளுடன் -தவம் , பக்தி, கேட்க ஆசை, ஸ்ரத்தாவுடன் அவன் கேட்கிறான். ஆத்ம வித்தை கேட்க ஆரம்பித்தாலே சம்சாரக் கடல் வற்ற தொடங்கிவிடும்.புழு எப்படி குளவியாய் மாறுகிறதோ அது போல் ஜீவா பரமாத்மாவாகிறான்.
What this episode covers
பாடல் : 11 அடங்கிய விருத்தி யானென் றறிந்தபின் செறிந்த மண்ணின், குடம்பையுட் புழுமுன் னூதும் குளவியின் கொள்கை போலத், தொடங்கிய குருவும் ஆன்ம சொரூபமே மருவ வேண்டி, உடம்பினுள் சீவ னைப்பார்த் துபதேசம் ஓது வாரே. பாடல் : 12 வாராயென் மகனே தன்னை மறந்தவன் பிறந்தி றந்து, தீராத சுழற்காற் றுற்ற செத்தைபோல் சுற்றிச் சுற்றிப், பேராத கால நேமிப் பிரமையில் திரிவன் போதம், ஆராயும் தன்னைத் தானென் றறியும் அவ் வளவுந் தானே. பாடல் : 13 தன்னையும் தனக்கா தாரத் தலைவனை யும்கண் டானேல், பின்னையத் தலைவன் தானாய்ப் பிரமமாய்ப் பிறப்புத் தீர்வன், உன்னைநீ அறிந்தா யாகில் உனக்கொரு கேடும் இல்லை, என்னைநீ கேட்கை யாலே ஈதுப தேசித் தேனே.
NOW PLAYING
கைவல்ய நவநீதம் - 9
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.