EPISODE · Dec 10, 2023 · 16 MIN
ஞானத்தேடல் - Ep 116 - நடராஜப் பத்து (Gnanathedal)
from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge
நடராஜப் பத்து - சிறுமணவூர் முனிசாமி முதலியார் நடராஜப் பத்து. மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ மறைநான்கின் அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டலமிரண்டேழு நீ பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ பிறவும் நீ யொருவ நீயே பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ பெற்றதாய் தந்தை நீயே பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ போதிக்க வந்த குரு நீ புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்குரைப்பேன்? ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (1) மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமி யாட மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட குழந்தை முருகேசனாட ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி அட்ட பாலகருமாட நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை விரைந்தோடி ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (2) கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே கட்டுண்டு நித்த நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமலிரவு பகலும் உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது ஒருபயனுமடைந்திலேனை தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும் தாவரம் பின்னலிட்டு தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இவ்வண்ணமாய் இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுனக்கழகாகுமா? ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (3) பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச மதுவல்ல சாலமல்ல அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அறியமோகனமுமல்ல கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி கொங்கணர் புலிப்பாணியும் கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம் கூறிடும் வயித்தியமுமல்ல என்மனது உன்னடிவிட்டு நீங்காது நிலைநிற்க ஏது புகல வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (4) நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும் நின்செவியில் மந்தமுண்டோ! நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ! சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ! தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ தந்தை நீ மலடுதானோ! விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு இனியுன்னை விடுவதில்லை ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (5) வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும் வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்தபோதிலும் மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும் மூர்க்கனே முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே தவறினும் முழு காமியே ஆயினும் பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ பார்த்தவர்கள் சொல்லுவார்கள் பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ பாலன் எனைக் காக்கொணாதோ எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (6) அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ அறிவிலாததற்கழுவனோ அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக்கழுவனோ முற்பிறப்பென்வினை செய்தேனென்றழுவனோ என் மூட உறவுக்கழுவனோ முற்பிறப்பின் வினைவந்து மூளுமென்றழுவனோ முத்தி வருமென்றுணர்வனோ தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ தவமென்ன எனுறழுவனோ தையலார்க்கழுவனோ மெய்தனக்கழுவனோ தரித்திர தசைக்கழுவனோ இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ எல்லாமுரைக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (7) காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ கன்னியர்கள் பழிகொண்டனோ கடனென்று பொருள்பறித்தே வயிறெரித்தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ தாயாருடன் பிறவிக்கென்னவினை செய்தனோ தந்தபொருளிலை யென்றனோ தானென்று கெர்வித்து கொலைகளவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ வாணவரைப் பழித்திட்டனோ வடவுபோலே பிறரைச் சேர்க்கா தடித்தனோ வந்தபின் என் செய்தனோ ஈயாத லோபி என்றே பெயரெடுத்தனோ எல்லாமும் பொறுத்தருளுவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே (8)
Embed this episode
NOW PLAYING
ஞானத்தேடல் - Ep 116 - நடராஜப் பத்து (Gnanathedal)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.