EPISODE · Jan 7, 2024 · 18 MIN
ஞானத்தேடல் - Ep 120 - திருமழிசை ஆழ்வார் - (Gnanathedal)
from ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge · host ஞானத்தேடல் - Quest for Knowledge
திருமழிசை ஆழ்வார் திருமழிசையாழ்வார் தை மாதம் மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சுதர்சன சக்கரத்தின் அம்சமாகத் திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர் தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி திருவாளன், பங்கயச்செல்வி வளர்த்தவர்கள் பொய்கையாழ்வார் (காஞ்சிபுரம் அருகில் திருவெக்கா) - பாஞ்சஜன்ய அம்சம் பூதத்தாழ்வார் (கடல்மல்லை - கௌமோதகி கதை அம்சம்) பேயாழ்வார் (திருமயிலை - நந்தகம் அம்சம்) வேறு பெயர்கள் பக்திசாரர் உறையில் இடாதவர் - வாளினை உறையில் இடாத வீரன் எனும் பொருள்பட (இங்கு ஆழ்வாரின் நா வாள் எனப்படுகிறது) குடமூக்கிற் பகவர் - என யாப்பருங்கல விருத்திகாரர் குறிப்பது இவரையே என்றும் சொல்லப்படுகிறது. திருமழிசையார் திருமழிசைபிரான் திருவெஃகா திருத்தல பெருமாளுக்கு பல ஆண்டுகள் தொண்டாற்றி வந்தார். அங்கு ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டியின் விருப்பப்படி அவளுக்கு இளமை வரம் கொடுத்தார் கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள். "ஓர் இரவு இருக்கை" என்று அழைக்கப்பட்டு இன்று மருவி "ஓரிக்கை" நான்முகன் திருவந்தாதி நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும் தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான் - யான்முகமாய் அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை, சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர் ஆருமறியார் அவன்பெருமை ஓரும் பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும் அருள்முடிவ தாழியான் பால் இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும் நின்றாக நின்னருளென் பாலதே - நன்றாக நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே நீயென்னை யன்றி யிலை திருவேங்கடம் பற்றி நிறைய பாடல்கள் உள்ளது இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனியறிந்தேன் எம்பெருமான் உன்னை - இனியறிந்தேன் காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை நாரணன்நீ நன்கறிந்தேன் நான் திருச்சந்த விருத்தம் பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய், தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய், மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய், நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு, அவையும் நீயே, அடு போர் அண்ணால் அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே; முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும் ஒன்றனிற் போற்றிய விசும்பும் நீயே; இரண்டின் உணரும் வளியும் நீயே; மூன்றின் உணரும் தீயும் நீயே; நான்கின் உணரும் நீரும் நீயே; ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே அதனால், நின்மருங்கின்று மூவேழ் உலகமும் மூலமும் அறனும் முதன்மையில் இகந்த காலமும் விசும்பும் காற்றொடு கனலும் - பரிபாடல் (நல்லெழுதியார்) பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடையிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி - மாணிக்கவாசகர் (போற்றித் திருஅகவல்) தன்னுளேதி ரைத்தெழும் தரங்கவெண்த டங்கடல் தன்னுளேதி ரைத்தெழுந் தடங்குகின்ற தன்மைபோல், நின்னுளேபி றந்திறந்து நிற்பவும் திரிபவும், நின்னுளேய டங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே குலங்களாய வீரிரண்டி லொன்றிலும்பி றந்திலேன், நலங்களாய நற்கலைகள் நாவிலும்ந வின்றிலேன், புலன்களைந்தும் வென்றிலேன்பொ றியிலேன்பு னித,நின் இலங்குபாத மன்றிமற்றொர் பற்றிலேனெம் மீசனே ஆறுமாறு மாறுமாயொ ரைந்துமைந்து மைந்துமாய், ஏறுசீரி ரண்டுமூன்று மேழுமாறு மெட்டுமாய், வேறுவேறு ஞானமாகி மெய்யினொடு பொய்யுமாய், ஊறொடோ சை யாயவைந்து மாய ஆய மாயனே ஆழ்வார்கள் திருவடிகள் சரணம் My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 For enquiries/feedback: [email protected]
Embed this episode
NOW PLAYING
ஞானத்தேடல் - Ep 120 - திருமழிசை ஆழ்வார் - (Gnanathedal)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.