-
46
பெரியார் ஒரு சகாப்தம்! - பேரறிஞர் அண்ணா
பெரியார் ஒரு சகாப்தம்! - பேரறிஞர் அண்ணா
-
45
கம்பராமாயணம் - பால காண்டம் | Tamil Audio Book
கம்பராமாயணம் - பால காண்டம் | Tamil Audio Book
-
44
பாஞ்சாலி சபதம் சி.சுப்ரமணிய பாரதியார் - Tamil Audio Books
பாஞ்சாலி சபதம் சி.சுப்ரமணிய பாரதியார் - Tamil Audio Books
-
43
மதமும் மூடநம்பிக்கையும் - இரா. நெடுஞ்செழியன் - Tamil Audio Books
மதமும் மூடநம்பிக்கையும் - இரா. நெடுஞ்செழியன் - Tamil Audio Books
-
42
தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு - பாரதிதாசன் - Tamil Free Audio Book
தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு - பாரதிதாசன் - Tamil Free Audio Book
-
41
தேவ லீலைகள் - அறிஞர் அண்ணா | Deva Leela - Aringar Annadurai - Tamil Audio Books
தேவ லீலைகள் - அறிஞர் அண்ணா | Deva Leela - Aringar Annadurai - Tamil Audio Books
-
40
சமஸ்கிருத சனியன் - தந்தை பெரியார் - Periyar Tamil Audio Books
சமஸ்கிருத சனியன் - தந்தை பெரியார் - Periyar Tamil Audio Books
-
39
மார்ட்டின் லூதர் - சி. பி. சிற்றரசு - history of martin luther - Tamil Audio Book
மார்ட்டின் லூதர் - சி. பி. சிற்றரசு - history of martin luther - Tamil Audio Book
-
38
இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் - நா. வானமாமலை | Tamil Audio Book
இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் - நா. வானமாமலை | Tamil Audio Book
-
37
அண்ணா சில நினைவுகள் - கவிஞர் கருணானந்தம் | Aringar Anna Books ,Tamil Audio Book
அண்ணா சில நினைவுகள் - கவிஞர் கருணானந்தம் | Aringar Anna Books ,Tamil Audio Book
-
36
சந்தர்ப்பவாதமும் இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சியும் - வி.இ. லெனின் | Opportunism - Tamil AudioBook
சந்தர்ப்பவாதமும் இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சியும் - வி.இ. லெனின் | Opportunism - Tamil AudioBook
-
35
கிராமங்கள் ஒழிய வேண்டும் - பெரியார் | Giramangal Oliya Vendum Periyar Tamil Audio Book
கிராமங்கள் ஒழிய வேண்டும் - பெரியார் | Giramangal Oliya Vendum Periyar Tamil Audio Book
-
34
கருட புராணம் - நரகத்தில் தண்டனைகள் குறித்த விளக்கம் - Garuda Purana Tamil Audio book
கருட புராணம் - நரகத்தில் தண்டனைகள் குறித்த விளக்கம் - Garuda Purana Tamil Audio book
-
33
பேரறிஞர் அண்ணாவின் நேர்காணல்கள் - Interviews of Aringar Anna
பேரறிஞர் அண்ணாவின் நேர்காணல்கள் - Interviews of Aringar Anna
-
32
கூலி உழைப்பும் மூலதனமும் - காரல் மார்க்ஸ் | Wage labour and capital Karl marx | Tamil Audio Book
கூலி உழைப்பும் மூலதனமும் - காரல் மார்க்ஸ் | Wage labour and capital Karl marx | Tamil Audio Book
-
31
பெண் ஏன் அடிமையானாள்..? - தந்தை பெரியார் - Periyar Books, Tamil Audio Book
பெண் ஏன் அடிமையானாள்..? - தந்தை பெரியார் - Periyar Books, Tamil Audio Book
-
30
ஆத்மா, மோட்சம், நரகம் - பெரியார் | Periyar, Tamil Audio Books
ஆத்மா, மோட்சம், நரகம் - பெரியார் | Periyar, Tamil Audio Books
-
29
மனுஸ்மிருதி பெண்கள் - சூத்திரர்கள் பற்றி என்ன சொல்கிறது ? Tamil Audio Book - Manusmirithi
மனுஸ்மிருதி பெண்கள் - சூத்திரர்கள் பற்றி என்ன சொல்கிறது ? Tamil Audio Book - Manusmirithi
-
28
கம்யூனிசத்தின் கோட்பாடுகள் - பிரடரிக் ஏங்கல்ஸ் | Friedrich Engels- The Principles of Communism | Tamil Audio Book
கம்யூனிசத்தின் கோட்பாடுகள் - பிரடரிக் ஏங்கல்ஸ் | Friedrich Engels- The Principles of Communism | Tamil Audio Book
-
27
சாதியை அளித்து ஒழிக்கும் வழி - அம்பேத்கர் | Annihilation of Caste - Dr. B.R. Ambedkar | Audio Book
சாதியை அளித்து ஒழிக்கும் வழி - அம்பேத்கர் | Annihilation of Caste - Dr. B.R. Ambedkar | Tamil Audio Book
-
26
கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை - கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ் | Tamil Audio Book
கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை - கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ் communist manifesto tamil Tamil Audio Book
-
25
ஆரிய மாயை - பேரறிஞர் அண்ணா | Ariya Mayai| Tamil Audio Book
ஆரிய மாயை - பேரறிஞர் அண்ணா | Ariya Mayai| Tamil Audio Book
-
24
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் - தோழர். விடுதலை ராஜேந்திரன்
22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து. 1938ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத் தில் இராஜாஜி எனும் பார்ப்பனர் இராஜகோபாலாச் சாரியாரை முதலமைச்சராகக் கொண்ட காங்கிரஸ் ஆட்சி நடந்தது. 1935ஆம் ஆண்டு பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டமன்றம் அது. முதலில் பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்தையே ஏற்க மாட்டோம் என்று ‘வீரம்’ பேசிய அன்றைய காங்கிரஸ் கட்சி, பிறகு பிரிட்டிஷ் சட்டத்தை ஏற்றுக் கொண்டு தேர்தலில் பங்கேற்று ஆட்சி அமைக்க முன் வந்தது. பெரியாரின் ‘குடிஅரசு’ இதை ‘சரணாகதி மந்திரி சபை’ என்று விமர்சித்தது. இந்தியாவில் எட்டு மாகாணங்களில் காங்கிரஸ் அப்போது ஆட்சியைப் பிடித்திருந்தது. அப்போது இராஜகோபாலாச்சாரி வேறு எந்த மாநில காங்கிரஸ் அமைச்சரவையும் எடுக்காத ஒரு முடிவை எடுத்தார். அதுதான் இந்தித் திணிப்பு. பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கி 1938 பிப்ரவரி 25ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவர உத்தரவிட்டார். 1926ஆம் ஆண்டிலேயே அதாவது இந்த உத்தரவு வருவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் ‘குடிஅரசில்’ ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, வடமொழி உயர்வுக்கு வகை தேடவே பார்ப்பனர்கள் இந்தியைத் திணிக்கிறார்கள் என்று எதிர்த்து எழுதினார். 1930ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் நடந்த ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தி நுழைவதைக் கண்டித்து பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். மறைமலை அடிகளார் போன்ற தமிழ் அறிஞர்களும் இந்தியைக் கடுமையாக எதிர்த்தனர். தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்தே இராஜகோபாலாச்சாரி இந்தியைத் திணிக்கும் ஆணையைப் பிறப்பித்தார். தமிழ்நாடு கொந்தளித்தது. 1938 பிப்ரவரியில் காஞ்சிபுரத்தில் மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. மாநாட்டில் பெரியார் இந்தியை எதிர்த்து போர்முரசு கொட் டினார். “இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதை ஒழித்தால் மட்டும் போதாது. அதற்கான உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்” என்று கூறிய பெரியார், அவை என்ன என்பதையும் விளக்கினார். “தமிழ் மக்களை புராண காலம் போல் பார்ப்பனியத்துக்கு நிரந்தர அடிமைகளாய் ஆக்குவதே, இதன் நோக்கம் சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொண்டிருக்கும் பார்ப்பனிய மத உணர்ச்சியை மீண்டும் சரியானபடி புகுத்துவதற்கே இந்தித் திணிப்பு” என்று அதன் நோக்கத்தை அம்பலப்படுத்தி போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தார்.
-
23
மார்க்சியப் பெரியாரியம் - தோழர் வே. ஆனைமுத்துவின் முன்னோக்கு
மார்க்சியத்திற்கு இசைந்த கொள்கையே பெரியாரியல் என்பதை நிறுவியதில் தோழர் வே. ஆனைமுத்துவின் பங்களிப்பு பெரியார் சிந்தனைகளை - பெரியார் கொள்கைகளை - பெரியாரியலை தமிழ்ச் சமுதாயத்தில் நிலைக்கச் செய்வதைத் தன் வாழ்நாள் பணியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதற்காகவே உழைப்பது, எவ்வளவு இன்னல் வரினும் ஏற்பது என்ற பாதையில் பயணித்தவர் தோழர் வே. ஆனைமுத்து. பற்பல ஏடுகளில் பல்லாயிரக்கணக்கானப் பக்கங்களில் பரவி, விரவிக் கிடந்த பெரியாரின் எழுத்துகளை, உரைகளைப் பொறுக்கித் தேர்ந்தெடுத்து, பகுத்துத் தொகுத்தளித்ததோடு அல்லாமல், எந்தச் சூழலில் எந்த நோக்கத்திற்காகக் கூறப் பட்ட கருத்துகள் அவை என விளக்கமளிப்பது என்பதோடு நில்லாமல் காலத்திற்கு ஏற்ப பெரியாரியலை செழுமையாக்குவது என்பதையும் தம் தோள் மேல் போட்டுப் பாடாற்றியவர் தோழர் வே.ஆனைமுத்து. “கொலைமலிந்த நாளில் கொல்லா நோன்பு நிலைபெற வேண்டி நெடுந்தவம் புரிந்தநம் தாயகம் சமண்மதம் தனைப்பெற்ற தன்றோ? .......... மக்கள் தொகுதி எக்குறை யாலே மிக்க துன்பம் மேவு கின்றதோ அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனை சிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம். ஜாரின் கொடுமை தாங்கா உருசியம் ஏகுற வெனினை ஈன்றே தீரும்!” என்று புரட்சிப் பாவலர் பாரதிதாசன் எடுத்துக்காட்டியது போல பிரித்தானிய அரசினுடைய அரவணைப்புடன் கோலோச்சிக் கொண்டிருந்த பார்ப்பன வல்லாதிக்கத்தினால் வெகுமக்க ளுக்குக் கல்வி பயிலும் உரிமை மறுக்கப்பட் டிருந்தது; அரசு வேலை வாய்ப்பு பெறும் உரிமை தடுக்கப்பட்டிருந்தது. உரிமை மறுப்புகளால் அமுக்கப்பட்டுக் கிடந்த சென்னை மாகாணப் பார்ப்பனரல்லாத மக்களின் தன்மானத்தைத் தட்டி எழுப்பி நிமிரச் செய்த உரிமை மீட்பராக எழுந்த மாமனிதர் பெரியார் ஈ.வெ.இரா.
-
22
மோடியின் ‘புதிய’ இந்தியாவில் இரண்டாம்தர குடிமக்களாக்கப்படும் இஸ்லாமிய மக்கள்
கடந்த ஒன்பது ஆண்டுகால மோடியின் ஆட்சியில் இஸ்லாமியர்கள் மீதான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச கும்பலின் தாக்குதல்களும் வன்முறைகளும் எண்ணற்றவை; அம்மக்களின் துயரங்களோ சொல்லில் அடங்காதவை. “இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும், இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும்” என காவி பயங்கரவாதிகள் வெளிப்படையாக மதவெறியைக் கக்கி வருகின்றனர். 2014 ஆம் ஆண்டில் மோடியின் ‘புதிய’ இந்தியாவில் தொடங்கிய இந்த இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் தற்போதைய ‘பாரத்’தில் புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது. இசுலாமியர்கள் மீதான சங்கப் பரிவாரக் கும்பலின் வன்முறைகளும், வெறுப்புப் பிரச்சாரங்களும் அந்த சமயத்துடன் மட்டும் முடிவடைந்துவிடுவதில்லை. மாறாக, அவை மக்களின் உணர்வு நிலையிலும் இந்துக்கள், இசுலாமியர்களுக்கு இடையிலான உறவு நிலையிலும் நிரந்தப் பிளவை ஏற்படுத்துகின்றன. அந்தவகையில், சங்கப் பரிவாரக் கும்பலும் கலவரங்களுக்குப் பின்னர், இசுலாமியர்களை மனிதர்களாகவே நடத்தக் கூடாது என்று வெறுப்பைத் தொடர்ந்து உமிழ்ந்துவருகின்றன. திட்டமிட்டு அவர்களை ஒடுக்கி வருகின்றன. இந்தக் கட்டுரை, ஹரியானாவின் நூஹ் மாவட்டக் கலவரம், 2019 டெல்லி கலவரம் மற்றும் ஜார்க்கண்ட்டின் மூன்று மாவட்ட இராமநவமி கலவரங்கள் என இசுலாமிய மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடத்தப்பட்ட பகுதிகளில், இக்கலவரங்களுக்குப் பிறகு இசுலாமியர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும். நாடாளுமன்றத்தில் அண்மை கால சம்பவங்கள் நாட்டின் மாண்புமிக்க இடத்திலேயே இசுலாமியர்கள் இரண்டாந்தர குடிமக்களாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. யோகியின் பயங்கரவாத ஆட்சி நடக்கும் உத்தரப் பிரதேசம், பா.ஜ.க.வின் கொடுங்கோல் ஆட்சி நடக்கும் அசாம், திரிபுரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இசுலாமியர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை இந்த மூன்று மாநில நிலைமைகளே நமக்கு உணர்த்திவிடும். இசுலாமியர்களை வெளியேற்றும் புதிய நாடாளுமன்றம்!
-
21
பெரியாருக்கு எதிரான அடுக்கடுக்கான திரிபுகள்
ரவிக்குமாரை ஆசிரியராகக் கொண்டு நெய்வேலியில் இருந்து வெளி வந்த ‘தலித்’ எனும் ஏட்டின் முதல் இதழில் (1997) இளையபெருமாள் அவர்கள் சொன்னதாக வந்திருந்த ஒரு செய்தி குறித்து தோழர் எஸ்.வி. ராஜதுரை அவர்கள் எழுதி, விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘பெரியார்: ஆகஸ்ட் 15’ என்ற நூலில் (1998) 21வது அத்தியாயமாக ‘பெரியாரும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த கட்டுரையின் அடிக்குறிப்பாக எழுதப்பட்டுள்ள ஒரு செய்தி: “பின்னாளில் ‘தொண்டு’ என்ற பத்திரிக்கையை நடத்தி வந்த வீராசாமியைப் பெரியார் 1952இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி (மாயவரம் இரட்டை உறுப்பினர் தொகுதி என்பதே சரி) ரிசர்வு தொகுதியிலிருந்து வெற்றி பெறச் செய்ததுடன் பெரியார் 1952இல் உருவாக்கிய அறக்கட்டளை உறுப்பினராகவும் ஆக்கினார். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் காரணமாக பெரியாரிடமிருந்து பிரிந்த ‘தொண்டு’ வீராசாமியை அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியதற்காக கழகத்திலிருந்து பெரியார் வெளியேற்றினார் என்ற அபத்தமான அருவருக்கத்தக்க குற்றச்சாட்டை பொறுப்புணர்வு மிக்க தலித் தலைவர் இளைய பெருமாள் கூறியுள்ளது (தலித் எண்:1. நெய்வேலி 1997) வருந்தத்தக்கது - எஸ்.வி.ஆர்” என்பதே அவ்வடிக்குறிப்பு.
-
20
EWS இடஒதுக்கீடு வரலாறு : எம்ஜிஆர் பொருளாதார வரையறையை நீக்கியது ஏன்?
இடஒதுக்கீட்டில் பொருளாதாரம் என்ற அம்சத்தை புகுத்துவது பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 1970களின் இறுதியிலேயே பொருளாதார அளவுகோல் முயற்சிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவு என்னவாக இருந்தது? சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களை முன்னேற்ற சிறப்புச் சலுகைகளை அளிப்பதை இந்திய அரசியலமைப்பின் பிரிவுகள் 15(4), 16(4) அனுமதிக்கின்றன. இதன் அடிப்படையில்தான் இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி வந்தன. மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்குப் பிறகு, மத்திய அரசும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை இந்த பிரிவு அளிக்கும் அனுமதியின் பேரிலேயே அளிக்கிறது. இந்தப் பிரிவு பொருளாதார அடிப்படையில் சலுகைகள் வழங்குவதை ஏற்கவில்லை. ஆகவே, இந்திய அரசியலமைப்பின் பிரிவு இதற்காகத் திருத்தப்பட்டு, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதையும் அனுமதிக்கும் வகையில் மாற்றப்பட்டது. அதன்படியே இப்போது மத்திய அரசின் பணிகளிலும் சில மாநிலங்களிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
-
19
பேரறிஞர் அண்ணாவின் நேர்காணல்கள்
இந்தி அழகுள்ளதல்ல. இலக்கிய வளங்கொண்டதல்ல என்று தங்கள் போன்றோரே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். ஆகவே, அத்தகைய ஒரு மொழி, எங்கள்மீது ஏன் சுமத்தப்பட வேண்டும்? எங்கள் எதிர்ப்புக்கு அரசியல் ரீதியுலும் காரணங்கள் உண்டு. இந்தி அரசாங்க மொழியாக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அதாவது இப்போது ஆங்கிலத்திற்கு இருக்கும் இடம் இந்திக்கு இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள். இதை எங்களால் ஒப்ப முடியாது. இந்தி தேவை என்றால் வேண்டுபவர்கள் அதைக் கற்றுக் கொள்ள விரும்புவதில் எங்களுக்கு எதிர்ப்பில்லை. ஆனால், அது அரசாங்க மொழி என்று வலியுறுத்தப்படுவதில் வேறு பொருள் உள்ளது.
-
18
“ஊழல் நாயகன்” மோடி!
கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது ‘வளர்ச்சி’ நாயகன் என்று ஊதிப் பெருக்கப்பட்ட பாசிச மோடியின் பிம்பம், இந்த ஒன்பது ஆண்டுகளில் சுக்குநூறாக உடைந்துவிட்டது. மோடி பேசிய “அச்சா தின்”, அதாவது “நல்ல நாள்” என்பதெல்லாம் அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்குத்தான், ‘வளர்ச்சி’ என்பதும் அவர்களுக்குத்தான் என்று அம்பலமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
-
17
சனாதன முகமூடிக்குள் பார்ப்பனியம்
சனாதன வாழ்வியல்’ எது என்று பதில் சொல்! சனாதனம் என்ற முகமூடியில் பார்ப்பனியம் இப்போது பதுங்கி நிற்கிறது. சனாதனம் என்பது ஒரு வாழ்க்கை முறை, அது வர்ணாசிரமம் அல்ல என்று வாதிடுகிறார்கள். சனாதனவாதிகளுக்கு சில கேள்விகள்.
-
16
சனாதன அடிமை மனுநீதி சோழன்
சனாதன அடிமை மனுநீதி சோழன்
-
15
தமிழ்நாட்டுக்கு பிள்ளையார் எப்போது வந்தார்..?
தமிழ்நாட்டுக்கு பிள்ளையார் எப்போது வந்தார்..?
-
14
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - 1883-ம் ஆண்டு ஜெர்மன் பதிப்பின் முகவுரை.
"மார்க்ஸ் எங்கெல்ஸ் - கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. தமிழாக்கம் - ரா. கிருஷ்ணய்யா" 1883-ம் ஆண்டு ஜெர்மன் பதிப்பின் முகவுரை.
-
13
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - 1882-ஆம் ஆண்டின் ருஷ்ய பதிப்புக்கு எழுதிய முகவுரை
"மார்க்ஸ் எங்கெல்ஸ் - கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, தமிழாக்கம் - ரா. கிருஷ்ணய்யா" 1882-ஆம் ஆண்டின் ருஷ்ய பதிப்புக்கு எழுதிய முகவுரை.
-
12
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - 1872-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை
"மார்க்ஸ் எங்கெல்ஸ் - கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, தமிழாக்கம் - ரா. கிருஷ்ணய்யா" 1872-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை தொழிலாளர்களது சர்வதேச நிறுவனமாகிய கம்யூ னிஸ்டுக் கழகம் அக்காலத்திய நிலைமைகளில் இரகசியமாகவே செயல்பட வேண்டியிருந்தது; 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற காங்கிரசில் இந்தக் கழகம் கட்சியின் விவரமான தத்துவார்த்த, நடைமுறை வேலைத்திட்டத்தை வெளியீட்டுக்காக வகுத்திடும்படி அடியில் கையொப்பமிட் டுள்ளோரைப் பணித்தது. இவ்வாறு பிறப்பெடுத்ததே பின் வரும் அறிக்கை. அச்சிடப்படுவதற்காக இதன் கையெழுத்துப் பிரதி பிப்ரவரி புரட்சிக்கு' ஒருசில வாரங்களுக்கு முன்னால் லண்டன் போய்ச் சேர்ந்தது. முதற்கண் ஜெர்மன் மொழி யில் வெளிவந்தது. பிறகு ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலுமாய் வெவ்வேனே பன்னிரண்டு பதிப்புகளுக் குக் குறையாமல் இம்மொழியில் வெளிவந்திருக்கிறது. முதன் முறையாய் ஆங்கிலத்தில் இது 1880ல் லண்டன் Red Republican' பத்திரிகையில் வெளியாயிற்று. இந்த மொழி பெயர்ப்பைச் செய்தவர் மிஸ் ஹெலன் மாஃபாலென். 1871ல், அமெரிக்காவில் மூன்றுக்குக் குறையாத வெவ்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன:பிரெஞ்சு மொழி பெயர்ப்பு 1848.ஆம் ஆண்டு ஜூலை எழுச்சிக்குச் சிறிதுகாலத் துக்கு முன் முதன் முதல் பாரிசில் வெளியாயிற்று. அண்மை யில் நியூயார்க் Le Socialiste* பத்திரிகையிலும் வெளிவந்திருக் கிறது. புதிய மொழிபெயர்ப்பு ஒன்று தயாராகி வருகிறது. முதன்முதல் ஜெர்மன் மொழியில் வெளிவந்தபின் சிறிது காலத்துக்கு எல்லாம் போலிஷ் பதிப்பு ஒன்று உண்டனில் வெளியிடப்பட்டது. ஆறுபதாம் ஆண்டுகளில் கஷ்யப் பதிப்பு ஒன்று ஜினீவாவில் வெளிவந்தது.
-
11
இந்திய கோயில்களின் வரலாறு | History of Indian Temples
இந்தியக் கட்டிடக்கலையின் பற்றியான மிக முந்திய ஆதாரங்கள், சிந்துவெளிப் பண்பாட்டுக் காலத்திலேயே காணப்பட்டது. சிந்துவெளிப் பண்பாட்டுக் காலமென்பது ஏறத்தாழ கி.மு 3500-இலிருந்து கி.மு 2000 வரையிலான காலப்பகுதியாகும். இக்காலகட்டத்தில் இருந்த மொஹெஞ்சதாரோ, ஹரப்பா போன்ற முக்கிய நகரங்களின் அழிபாடுகளிலிருந்து, அக்காலத்தின் கட்டிடக்கலையில் இந்தியர்கள் அடைந்திருந்த உயர் நிலை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், கி.மு 1500 அளவில் சிந்துவெளிப் பண்பாடு அழிந்த பின்னர், ஏறத்தாழ கி.மு. 500 வரைக்கும் நிலைத்திருக்கும் வகையில் எவ்வித கட்டிடங்களும், கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
-
10
மார்புக்கு வரிவிதித்த திருவிதாங்கூர் சமஸ்தானம் | Breast tax history
முலை வரி அல்லது மார்பக வரி (Breast Tax) (மலையாளம்; തലക്കരം, முலைக்காரம் அல்லது முலை-காரம்) என்பது திருவிதாங்கூர் இராச்சியத்தில் (இன்றைய இந்தியாவின் கேரள மாநிலம்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், தலித் இந்துக்கள் பொதுவாக தங்கள் மார்பகங்களை மறைக்கும் விதமாக ஆடை அணிய விரும்பும் பெண்களுக்கு 1924 வரை விதிக்கப்பட்ட வரியாகும். இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும் தலித் பெண்களுக்கும் மார்பகங்கள் வளரத் தொடங்கும்போது அரசாங்கத்திற்கு முலை வரியைச் செலுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டனர். இதர பிற்படுத்தப்பட்ட ஆண்கள் தலை-காரம் என்று அழைக்கப்படும் இதேபோன்ற ஒரு வரியை தங்கள் தலைப்பாகைக்காக செலுத்த வேண்டும். திருவிதாங்கூரில் வரி வசூலிப்பவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, பூப்பு எய்திய தலித் பெண்களிடமிருந்து முலை வரியை வசூலிப்பார்கள். பெண்ணின் மார்பகங்களின் அளவைப் பொறுத்து வரி வசூலிப்பவர்களால் வரி அளவு மதிப்பிடப்பட்டது.
-
9
சமணர் கழுவேற்றம் - ஏன்? எதற்கு? | Yean Tamil
சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வாகும். சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது. ஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய பாண்டிய மன்னன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள சாமணத்தம் என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று சொல்லப்படுகிறது.
-
8
பிகினி நீச்சல் உடையின் கவர்ச்சிக்குப் பின்னால் மறைந்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரமுகம்!
பேஷன் உலகில் பிகினி நீச்சல் உடை அறிமுகமானதற்குப் பின்னால் நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீர்க் கதை மறைந்திருக்கிறது. முதலில் அதற்கு ஏன் பிகினி என்ற பெயர் வந்தது என்ற விபரம் பலருக்குத் தெரியாது. பசுபிக் சமுத்திரத்தில் உள்ள மார்ஷல் தீவுகள், இன்று அமெரிக்காவின் கீழான “சுதந்திரமான நாடு”. அது ஆயிரம் மைல் தூரத்திற்குள் உள்ள தீவுக் கூட்டங்களை உள்ளடக்கியது. அதில் ஒன்று தான் பிகினித் தீவு. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஜப்பானியர் வசமிருந்த மார்ஷல் தீவுகளை அமெரிக்க இராணுவம் கைப்பற்றி தனதாக்கிக் கொண்டது. அது பின்னர் அமெரிக்காவுக்கு சொந்தமான கடல் கடந்த பிரதேசங்களில் ஒன்றானது. 1946 ம் ஆண்டு, உலகின் முதலாவது ஹைட்ரஜன் குண்டு பிகினித் தீவின் அருகில் தான் பரிசோதிக்கப்பட்டது. அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதிப்பதற்கு முன்னர், பிகினித் தீவில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்க இராணுவம் அவர்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் வழங்கி இன்னொரு தீவில் தங்க வைத்தது. சில வாரங்களில் ஊர் திரும்பலாம் என்று எண்ணியிருந்த பிகினித் தீவுவாசிகள், வருடக் கணக்காக அகதிகளாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 1970 ம் ஆண்டளவில், கதிர்வீச்சு அபாயம் இல்லையென்றும், திரும்பிச் செல்வது பாதுகாப்பானது என்றும் சொல்லப் பட்டது. அதை நம்பி திரும்பிச் சென்றவர்களில் பலருக்கு புற்றுநோய் வந்தது. குழந்தைகள், பெரியவர்கள் என்றில்லாமல் பலர் குறுகிய காலத்திற்குள் மரணமுற்றனர். இதற்கிடையே பிகினித் தீவு மக்களை அமெரிக்க இராணுவம் நிரந்தர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதாவது, ஹைட்ரஜன் குண்டு வெடிப்பால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை ஆராய்வதற்காக, அவர்களை பரிசோதனை எலிகளாக பயன்படுத்தியது. சிலர் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். அப்போதெல்லாம் அமெரிக்க அரசு அவர்களை மனிதர்களாகவே மதிக்கவில்லை. கதிர்வீச்சின் தாக்கம் இரண்டாம் தலைமுறையினரையும் விட்டு வைக்கவில்லை. அதனால் தம்மை அங்கிருந்து வெளியேற்றுமாறு பிகினித் தீவுவாசிகள் அமெரிக்க அரசை கேட்டுக் கொண்டனர். ஆனால் அந்த வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. இறுதியில் கிரீன்பீஸ் அமைப்பின் கப்பல் வந்து தான் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றது. ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையின் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொண்டால், மார்ஷல் தீவுகளுக்கு “சுதந்திரம்” கொடுப்பதாக அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் நஷ்டஈட்டுப் பணம் பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவச் செலவுக்கே போதாது.
-
7
தமிழ்நாட்டில் RSS சாகா அதிகரித்துவிட்டதா..?
தமிழ்நாட்டில் RSS சாகா அதிகரித்துவிட்டதா..?
-
6
மோடி அரசின் தேசியக்கொடி அரசியல் | 75th independence day of indi
மோடி அரசின் தேசியக்கொடி அரசியல் | 75th independence day of indi
-
5
இந்திய சமூக விடுதலையின் தந்தை சாகு மகாராஜ் | History of Shahu Maharaj
இந்திய சமூக விடுதலையின் தந்தை சாகு மகாராஜ் #shahumaharaj #tamildocumentary #tamilhistory
-
4
திராவிடம் கண்ட பேரறிஞர் கால்டுவெல் | History of Robert Caldwel
இராபர்டு கால்டுவெல் (Robert Caldwell) (7 மே 1814 - 28 ஆகத்து 1891) ஒரு கிருத்துவச் சமயப்பரப்பாளர் ஆவார். தன் 24-ஆம் அகவையில் இந்தியா வந்தடைந்த அவர், விவிலியத்தை வட்டார மொழியில் கற்பிப்பதற்காகத் தமிழைக் கற்றார். இதுவே, பின்னர், அவரைத் தென்னிந்திய மொழிகளுக்கான ஒப்பிலக்கண நூலொன்றை எழுத வைத்தது. அவருடைய நூலில், பழைய ஏற்பாட்டிலுள்ள எபிரேயத்திலும், பழங்கிரேக்கத்திலும், தொலெமி குறிப்பிட்டுள்ள இடங்களிலும் திராவிடச் சொற்கள் உள்ளதாகப் பரிந்துரைத்தார். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதாகும்.
-
3
ஹிட்லர் உருவாக்கிய மனிதப் பண்ணை | Hitler's Lebensborn
ஹிட்லர் உருவாக்கிய மனிதப் பண்ணை | Hitler's Lebensborn முதலாம் போரில் வீழ்ச்சியடைந்த ஜெர்மன் மக்கள் தொகையை மீண்டும் பெருக்க ஒரு அதிரடி திட்டத்தை அந்த நாட்டின் நாஜிப்படை அறிமுகப்படுத்தியது. அதில் பல பெண்கள் தாமாக முன்வந்து கர்ப்பம் தரித்து நாட்டுக்காக குழந்தைகளைப் பெற்றெடுக்க ஆர்வம் காட்டியது, நாம் அதிகம் படித்திருக்காத வரலாறு. அத்தகைய ஒரு மாறுபட்ட வரலாற்றுப்பதிவைத்தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம். 1936 ஆம் ஆண்டில், நாஜி ஆதரவாளரும் பட்டதாரியுமான ஹில்டேகார்ட் ட்ரூட்ஸ் ஜெர்மனியின் இனரீதியான 'தூய்மையான' பெண்களில் ஒருவராக ஒரு திட்டத்தில் சேர்க்கப்பட்டார். ஆரிய குழந்தையை உருவாக்கும் நம்பிக்கையில் 'ஷுட்ஸ் ஸ்டேஃபல்' எனப்படும் எஸ்.எஸ் அதிகாரிகளுடன் உடலுறவு கொள்வது இந்த பெண்கள் நாஜி ஆளுகைக்கு ஆற்றும் சேவையாகப் பார்க்கப்பட்டது.
-
2
The State and Revolution by Vladimir Lenin Audiobook
The State and Revolution by Vladimir Lenin Audiobook
-
1
"பெரியார், சுயமரியாதை, சமூகநீதி," (சொற்பொழிவு - 1) - சு. அறிவுக்கரசு
"பெரியார், சுயமரியாதை, சமூகநீதி," (சொற்பொழிவு - 1) - சு. அறிவுக்கரசு
-
0
சாதியை மறைமுகமாய் கடைபிடிப்பவர்கள் யார்? - வழக்கறிஞர். அருள்மொழி
சாதியை மறைமுகமாய் கடைபிடிப்பவர்கள் யார்? - வழக்கறிஞர். அருள்மொழி
-
-1
இந்து மதம் எப்போது, யாரால், ஏன் தோற்றுவிக்கப்பட்டது? - பேராசிரியர். சுப. வீரபாண்டியன்
இந்து மதம் எப்போது, யாரால், ஏன் தோற்றுவிக்கப்பட்டது? - பேராசிரியர். சுப. வீரபாண்டியன்
-
-2
பெரியாரைப் போல் ஒரு தலைவர் இல்லை - ஆ. ராசா பேச்சு | A. Raja speech about Periyar and Dravidian Ideol
பெரியாரைப் போல் ஒரு தலைவர் இல்லை - ஆ. ராசா பேச்சு | A. Raja speech about Periyar and Dravidian Ideology
-
-3
சடங்கு என்ற பெயரில் சிவாஜியிடம் பார்ப்பனர்கள் செய்த சுரண்டல்கள் - பேராசிரியர். கருணானந்தன் | History
சடங்கு என்ற பெயரில் சிவாஜியிடம் பார்ப்பனர்கள் செய்த சுரண்டல்கள் - பேராசிரியர். கருணானந்தன் | History of Chhatrapati Shivaji ( Part - 3)
We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
Loading similar podcasts...